Saturday, 31 December 2011

DECEMBER 5th WEEK. PARAYANAM



850th week

DECEMBER 5th. WEEK. PARAYANAM

ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத சுவாமி நமஹா  :


    
31-12-2011 TIME 7.30 PM
 (this WEEK PARAYANAM)
ஸ்ரீ பத்ரி நாராயணன்  அவர்கள் அகத்தில் .   
(IN THE RESIDENCE OF  Mr. V BADRI NARAYANAN). 
B-9 18-C UDAIGIRI-II, SECTOR-34, NOIDA 

ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா


15. A typical Vaishnavite, this girl allows herself to be blamed.

சனி டிசம்பர், 31, 2011
மார்கழி, 15, கர வருடம்


திருப்பாவை பாடல் - 15


எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.


பொருள்: ""இளமையான கிளியே! உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், எப்படியெல்லாமோ அழைத்தும் இன்னும் உறங்குகிறாயே?'' என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.


அந்த தோழி, ""கோபப்படாதீர்கள்! இதோ வந்து விடுகிறேன்,'' என்கிறாள்.உடனே தோழிகள், ""உன்னுடைய @பச்” மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது கோபிக்காதே என்கிறாயே,'' என்று அதட்டினர்.அதற்கு அவள், ""சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை என்பது நிஜமே! நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருந்து விட்டு போங்கள்,'' என்று பதிலுக்கு கோபிக்கிறாள்.


""அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன சிறப்பு உன்னிடம் இருக்கிறது?'' என்று மீண்டும் கடிகிறார்கள் தோழிகள்.வீட்டுக்குள் இருந்தவளும் விடவில்லை. ""நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?'' என்கிறாள்
.தோழிகள் அவளிடம், ""நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே கிளம்பு,'' என்கிறார்கள்.

விளக்கம்: இந்தப் பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமையாக பாடியிருக்கிறாள் ஆண்டாள். தோழிகளும் தான் எவ்வளவு பொறுப்பார்கள்! கோபத்தில் தோழியைத் திட்டித் தீர்த்து விட்டார்கள். கோபத்தில் கோபமான சம்பவங்கள் தானே வெளிப்படும். இந்தப்பாட்டிலும், கண்ணன் கோபத்துடன் போரிட்ட சம்பவங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

“Hey, tiny parrot, yet asleep;”
         “Don't shriek, girls! I have come”
     “Thou are adept in essays,
          Erelong thy tongue we know”
     “You are eloquent or let myself be;”
         “Lo! Would 'st thou move out soon?
     What's that special in thee?” ”Have all come?”
         “Have come, count thou apprehensive”
         We will sing the Elusive
         Who had crush'd the tusker mighty massive
         And shatter'd hostile; listen and consider, our damsel.

திருவெம்பாவை பாடல் - 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.


பொருள்: மார்புக்கச்சையும், ஆபரணமும் அணிந்த பெண்களே! நம் தோழி "எம்பெருமானே' என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை விடாமல் பேசுவாள். அப்போது அவளது கண்களில் கண்ணீர் பெருகும். அந்த பரவசத்தில் இருந்து அவளால் மீண்டும் இயல்புநிலைக்கு வர முடியாமல் போகும்.


விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்று பித்துப்பிடித்து நிற்பாள்.அவளைப் போலவே, நம்மை ஆட்கொள்ளக் காத்திருக்கும் சிவனின் தாள் பணிவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.


விளக்கம்: சிரித்தாலும் அழுதாலும் கண்ணீர் வரும். பக்திப்பரவசத்தில் மூழ்கினாலும் கண்ணீர் பெருகும் என்பதற்கு இந்தப் பாடல் எடுத்துக்காட்டு.

Meaning:
Now and then she utters, "My Lord", thus her mouth never relent in the praise of the glory of Our Lord ! With the mind rejoicing, never stopping long streams of tears wetting the eye, not even once coming to this world, not bowing down to the celestial powers, to the Emperor one becomes mad like this. One who takes slaves like this, that Proficient's foot, Oh girls of ornated breasts, let us sing and swim in the floral stream. 

Friday, 30 December 2011

14. Though promised earlier to arouse all, this girl is blamed.

வெள்ளி டிசம்பர்,30, 2011
மார்கழி 14, கர வருடம்



திருப்பாவை
பாடல் - 14


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து
ஆம்பல் வாய் கூம்பின் காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

பொருள்: நாளை காலையில் முன்னதாகவே வந்து உங்களை எழுப்புவேன் என்று வீரம் பேசியவளே! சொன்ன சொல் தவறியதற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர் மலர்ந்தும், ஆம்பல் தலை கவிழ்ந்தும் விட்டது. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, சங்கு முழக்க சென்று கொண்டிருக்கின்றனர். சங்கும் சக்கரமும் ஏந்திய வீரமிக்கவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனை வணங்க, இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

விளக்கம்: ஒன்றைச் சொன்னால், அதை செய்தே தீர வேண்டும். வாக்குறுதி கொடுப்பதும், பிறகு ஒன்றுமே தெரியாதது போல் அப்பாவித்தனமாக நடிப்பதும் இறைவனுக்கு ஏற்புடையதல்ல என்பதும் இப்பாடல் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

 In your backyard garden pond
        Lotus hath opened its petals benign;
     Lily hath closed its petals as a cone;
        Lo! Brick power hue attir'd
     White-toothed monks are afoot
        To trumpet conch in their temple divine;
     Vouched to arouse us, pompously you mouth
        Vivacious your tongue lassie unabashed;
        His eye is a la lotus; and arm a hillock fine
        Toting conch and wheel that shines.
        Arise, sing! Listen and consider, our damsel.
திருவெண்பாவை- பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பொருள்: காதணிகள் ஆட, தங்கநகைகள் ஆட, கூந்தல் ஆட, அக்கூந்தலில் சூடியுள்ளமலர்களை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம்பலத்தில் நடனமிடும் சிவனின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லுங்கள். ஜோதி வடிவாய் காட்சி தரும் சிவனின் வீரச்செயல்களை பேசுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி கூறுங்கள். முதலும் முடிவும் இல்லாத இறைவனின் புகழ் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மை விலக்கும், அவனது திருவடி சிறப்பு பற்றி பேசிக்கொண்டே நீராடுங்கள்.

விளக்கம்: மார்கழியில் கத்துகிற ஒலிபெருக்கி தேவையில்லை. "நமசிவாய' என்ற மந்திரம் நம் வாயில் இருந்து ஒலிக்க வேண்டும். காலையில் புனித நீராடும் போது, அந்த சிவனின் திருநாமங்களும், அவனது சிறப்புகளுமே நினைவுக்கு வர வேண்டும். மற்ற சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்தால் தான், புனித நீராடலின் முழுபலனும் கிடைக்கும் என்ற கருத்தை இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது.
Meaning:
The earring dancing, worn ornaments dancing, the Lady's plait dancing, the crowd of gasps dancing, bathing in the chill water, singing the Tiny Hall, singing the Meaning of vEdhAs, singing the Being of that, singing the nature of the Luminance, singing the enclading bunch of flower konRai, singing the nature of the Source, singing the Being of the end, singing the nature of the foot of the Lady who brought us up, bathe. 

Thursday, 29 December 2011

13. A girl with charming eyes, yet ego centric is awakened.

வியாழன் டிசம்பர், 29, 2011
மார்கழி 13, கர வருடம்

 

திருப்பாவை பாடல் - 13


புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: பறவையாய் உருமாறி வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழித்தவன், ராவணனின் தலையைக் கொய்தவன் நம் நாராயணன். அவனது புகழைப் பாடியபடியே, தோழிகள் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர். கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து, வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் பாடுகின்றன. தாமரை மலர் கண்களையுடைய தோழியே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறி தெரிந்தும், குளிர்ந்த நீரில் நீச்சலடித்து நீராட வராமல் என்ன செய்கிறாய்? நல்மாதமான மார்கழியில் அவனை வணங்குவது சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

விளக்கம்: "காலம் மாறி விட்டது என்று யாராவது சொன்னால், அதனை ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில், நேரத்தை வீணடிப்பது ஒரு வகை திருட்டு என்கிறாள் ஆண்டாள். அதையே "கள்ளம் தவிர்ந்து' என்ற சொல்லால் குறிப்பிடுகிறாள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் காலத்தின் அருமையை உணர்த்தியுள்ளனர் நம் பெரியோர்.

Singing the glory of Him
       Who split the bird's bill and kill'd
    And Him who pluck'd the wicked demon as a weed;
       Girlies all reach'd the site of deity;
    Venus ascended and Jupiter, had slept sunk;
       Birds too clanged behold, belle gild:
    Thy eye, is a la flower or deer  flirting?
       Yet asleep in bed,
       Enjoin to dip and shiver in bath cold;
       Shed off thy stealth untold
       This  day is  auspicious, consider  our damsel.

திருவெம்பாவை பாடல் - 13


பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


விளக்கம்: தோழியே! நாம் குளிக்கும் குளத்தின் நடுவில் கரிய குவளை மலர்களும், சிவந்த தாமரை மலர்களும் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் மிதக்கின்றன. தங்கள் அழுக்கை களைய மக்கள் இங்கு வருகிறார்கள். அவர்கள் "நமசிவாய' என்ற மந்திரத்தை மனதார சொல்கிறார்கள். இந்தக் குளம் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் ஒலிக்க, மார்புகள் விம்ம பாய்ந்து சென்று நீராடுவோம்.


விளக்கம்: குளத்திலுள்ள கரிய குவளை மலர்களை அம்பிகையாகவும், தாமரையை சிவனாகவும், மாணிக்கவாசகர் தன் தெய்வீகப் பார்வையால் பார்க்கிறார். சாதாரண குளத்தில் உடல் அழுக்கு நீங்கும். பக்தி குளத்தில் மன அழுக்கு நீங்கும் என்பது அவரது கருத்து.

Meaning:
Because of the greeny dark kuvaLai flower, because of the fresh bud of the red lotus, because of the buzzing sound of the small-bodied creatures, this brimming pond appears, with the arrival and taking refuge of those who want to wash away their impurities, like our Lordess and our King. Jumping into this pond of lotus floral spring with our conches roaring, anklets clinging each other, breasts booming, bathing pond booming, swim in the pond. 

Wednesday, 28 December 2011

12. A girl whose brother doing 'Kainkaryam' to Krishna is awakened.

புதன் டிசம்பர்,  28, 2011

மார்கழி 12, கர வருடம்

திருப்பாவை-பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: பசியால் வாடும் கன்றுகளை எண்ணிய எருமைகள், மடியில் சொரியும் பால் எங்கள் வீட்டு வாசல்களை சேறாக்குகிறது. இப்படி பெருமளவு பால் சொரியும் எருமைகளின் சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனியில், உன் வீட்டு வாசலில் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமான் நாராயணனின் பெருமையைப் பாடிக் கொண்டிருக்கிறோம். நீயோ, பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகு, உனக்கு மட்டும் ஏன் இந்த பேருறக்கம்?


விளக்கம்: "எனக்கென்ன ஆச்சு! நீ வேண்டுமானால் தூங்கு, நாங்கள் போகிறோம் கண்ணனைக் காண' என்று எந்த ஒரு பெண்ணும் கோபத்துடன் கிளம்பவில்லை. பொறுமையுடன் நீண்டநேரமாக காத்து நிற்கிறார்கள். பொறுமையும் ஒரு வகை வழிபாடே. பொறுத்தார் பூமியாள்வார் என்பது இப்பாடல் மூலம் வெளிப்படுகிறது.

திருவெம்பாவை-பாடல் - 12


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்!


பொருள்: தோழியரே! பிறவித்துன்பம் வராமல் தடுக்கும்
கங்கையைத் தலையில் கொண்டவனும், கையில் அக்னியுடன், சிதம்பரம் அம்பலத்தில் நடனமாடும் கலைஞனும், வானம், பூலோகம், பிற உலகங்களை காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான சிவனை, நம் கையில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலியெழுப்ப வணங்குவோம்.இடுப்பிலுள்ள ஆபரணங்கள் ஒலி எழுப்ப, பூக்கள் நிறைந்த பொய்கையில் நீந்தி அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.


விளக்கம்: எதற்காக நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? பிறவித்துயரம் அகலுவதற்கு தானே! அதற்கு என்ன வழி? கங்கையில் நீராடி பாவத்தை தொலைப்பது தான்! அங்கே போக காசில்லையே என்றால், இறைவன் நம் முன்னாலேயே நிற்கிறான், கங்கையை தலையில் சுமந்தபடி! அவனது திருவடியில் எல்லாவற்றையும் விட்டு விட்டு சரணடைந்தால், பிறப்பற்ற நிலை உறுதி.

Meaning:
The One with chaste water(river), whom we chant and dance in order to get rid of the roaring suffering of birth. The Fire Dancer at the tiny hall of nice thillai. Protecting, creating and removing this sky, world and all of us as a play, speaking the (sacred) words, the bangles tingling, the ornating snakes hissing, the bees buzzing on the decorated plait (He dances). Striking the (water in the) floral pond, praising the Golden Foot of the Lord, take bath in this nice water. 

12. A girl whose brother doing 'Kainkaryam' to Krishna is awakened.

புதன் டிசம்பர்,  28, 2011

மார்கழி 12, கர வருடம்

திருப்பாவை-பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: பசியால் வாடும் கன்றுகளை எண்ணிய எருமைகள், மடியில் சொரியும் பால் எங்கள் வீட்டு வாசல்களை சேறாக்குகிறது. இப்படி பெருமளவு பால் சொரியும் எருமைகளின் சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனியில், உன் வீட்டு வாசலில் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமான் நாராயணனின் பெருமையைப் பாடிக் கொண்டிருக்கிறோம். நீயோ, பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகு, உனக்கு மட்டும் ஏன் இந்த பேருறக்கம்?


விளக்கம்: "எனக்கென்ன ஆச்சு! நீ வேண்டுமானால் தூங்கு, நாங்கள் போகிறோம் கண்ணனைக் காண' என்று எந்த ஒரு பெண்ணும் கோபத்துடன் கிளம்பவில்லை. பொறுமையுடன் நீண்டநேரமாக காத்து நிற்கிறார்கள். பொறுமையும் ஒரு வகை வழிபாடே. பொறுத்தார் பூமியாள்வார் என்பது இப்பாடல் மூலம் வெளிப்படுகிறது.

திருவெம்பாவை-பாடல் - 12


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்!


பொருள்: தோழியரே! பிறவித்துன்பம் வராமல் தடுக்கும்
கங்கையைத் தலையில் கொண்டவனும், கையில் அக்னியுடன், சிதம்பரம் அம்பலத்தில் நடனமாடும் கலைஞனும், வானம், பூலோகம், பிற உலகங்களை காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான சிவனை, நம் கையில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலியெழுப்ப வணங்குவோம்.இடுப்பிலுள்ள ஆபரணங்கள் ஒலி எழுப்ப, பூக்கள் நிறைந்த பொய்கையில் நீந்தி அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.


விளக்கம்: எதற்காக நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? பிறவித்துயரம் அகலுவதற்கு தானே! அதற்கு என்ன வழி? கங்கையில் நீராடி பாவத்தை தொலைப்பது தான்! அங்கே போக காசில்லையே என்றால், இறைவன் நம் முன்னாலேயே நிற்கிறான், கங்கையை தலையில் சுமந்தபடி! அவனது திருவடியில் எல்லாவற்றையும் விட்டு விட்டு சரணடைந்தால், பிறப்பற்ற நிலை உறுதி.

Meaning:
The One with chaste water(river), whom we chant and dance in order to get rid of the roaring suffering of birth. The Fire Dancer at the tiny hall of nice thillai. Protecting, creating and removing this sky, world and all of us as a play, speaking the (sacred) words, the bangles tingling, the ornating snakes hissing, the bees buzzing on the decorated plait (He dances). Striking the (water in the) floral pond, praising the Golden Foot of the Lord, take bath in this nice water. 

Tuesday, 27 December 2011

Paasuram 11 - Katrukkaravai (. “If Krishna wants me, let Him fast to achieve me”.)

செவ்வாய், டிசம்பர்,27,

மார்கழி 11, கர வருடம்
திருப்பாவை-பாடல் 11

Paasuram - 11

Thou, daughter of a cowherd, who
        Sans a single guilt, milks many a milk-cow
     Daunts arrogance, preempt stuns at its precincts;
        Thy girdle seems a serpent in pit;
     Wild jungle peacock, start!
        All neighbour mates have arrived now
     Entered thy courtyard in grace
        And sing the name of cloud colour'd yet
        Creeper gold!  Unperturb'd and mute
        Drowsest thou; what for, our pet?
        Beloved bride, listen and consider, our damsel.


      திருவெம்பாவை  11


11.
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

வண்டுகள் மொய்க்கின்ற குளத்தில் கைகளால் குடைந்து
நீராடும்பொழுது உன் திருவடிகளைப் பாடி, வழிமுறையாக வந்த
அடியவர்களாகிய நாங்கள் வாழ்வுபெற்றோம். ஐயனே ! ஆர்க்கின்ற
நெருப்பு போன்று சிவந்தவனே ! திருநீறு பூசும் செல்வனே ! சிறிய
இடையையும், மை நிறைந்த அகன்ற கண்களையும் உடைய உமையின்
மணவாளனே ! ஐயா, நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடலில்
உய்யும் அடியார்கள் உய்யும் வகையில் நாங்களும் உய்ந்துவிட்டோம் !
நாங்கள் தளர்வுறாமல் காப்பாயாக !

மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.

11.
moyyAr thadampoykai pukku mugErennak
  kaiyAR kudin^dhu kudain^dhun kazalpAdi
aiyA vaziyadiyOm vAzn^dhON^kAN ArazalpOR
  cheyyAveN NIRAdi chelvA chiRumaruN^gul
maiyAr thadaN^kaN madan^thai maNavALA
  aiyAn^I AtkoN daruLum viLaiyAttin
uyvArkaL uyyum vakaiellAm uyn^dhozin^dhOm
  eyyAmaR kAppAy emaiElOr empAvAy
Meaning:
The pond filled with the reverberations of the flies, bathing in that striking the water with our bud like hands singing your ornated foot, Oh Great, your traditional slaves, we lived. Oh Red one like the fierce fire ! Oh White Ash smeared Rich ! The Lord of the fragrance of the Lady with nicely dyed, well formed eyes and small vulva. Oh Great, in your play of blessing by taking as slaves, the way people get rescued we all got rescued off. Save us.