Saturday 31 December 2011

DECEMBER 5th WEEK. PARAYANAM



850th week

DECEMBER 5th. WEEK. PARAYANAM

ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத சுவாமி நமஹா  :


    
31-12-2011 TIME 7.30 PM
 (this WEEK PARAYANAM)
ஸ்ரீ பத்ரி நாராயணன்  அவர்கள் அகத்தில் .   
(IN THE RESIDENCE OF  Mr. V BADRI NARAYANAN). 
B-9 18-C UDAIGIRI-II, SECTOR-34, NOIDA 

ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா


15. A typical Vaishnavite, this girl allows herself to be blamed.

சனி டிசம்பர், 31, 2011
மார்கழி, 15, கர வருடம்


திருப்பாவை பாடல் - 15


எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.


பொருள்: ""இளமையான கிளியே! உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், எப்படியெல்லாமோ அழைத்தும் இன்னும் உறங்குகிறாயே?'' என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.


அந்த தோழி, ""கோபப்படாதீர்கள்! இதோ வந்து விடுகிறேன்,'' என்கிறாள்.உடனே தோழிகள், ""உன்னுடைய @பச்” மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது கோபிக்காதே என்கிறாயே,'' என்று அதட்டினர்.அதற்கு அவள், ""சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை என்பது நிஜமே! நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருந்து விட்டு போங்கள்,'' என்று பதிலுக்கு கோபிக்கிறாள்.


""அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன சிறப்பு உன்னிடம் இருக்கிறது?'' என்று மீண்டும் கடிகிறார்கள் தோழிகள்.வீட்டுக்குள் இருந்தவளும் விடவில்லை. ""நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?'' என்கிறாள்
.தோழிகள் அவளிடம், ""நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே கிளம்பு,'' என்கிறார்கள்.

விளக்கம்: இந்தப் பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமையாக பாடியிருக்கிறாள் ஆண்டாள். தோழிகளும் தான் எவ்வளவு பொறுப்பார்கள்! கோபத்தில் தோழியைத் திட்டித் தீர்த்து விட்டார்கள். கோபத்தில் கோபமான சம்பவங்கள் தானே வெளிப்படும். இந்தப்பாட்டிலும், கண்ணன் கோபத்துடன் போரிட்ட சம்பவங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

“Hey, tiny parrot, yet asleep;”
         “Don't shriek, girls! I have come”
     “Thou are adept in essays,
          Erelong thy tongue we know”
     “You are eloquent or let myself be;”
         “Lo! Would 'st thou move out soon?
     What's that special in thee?” ”Have all come?”
         “Have come, count thou apprehensive”
         We will sing the Elusive
         Who had crush'd the tusker mighty massive
         And shatter'd hostile; listen and consider, our damsel.

திருவெம்பாவை பாடல் - 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.


பொருள்: மார்புக்கச்சையும், ஆபரணமும் அணிந்த பெண்களே! நம் தோழி "எம்பெருமானே' என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை விடாமல் பேசுவாள். அப்போது அவளது கண்களில் கண்ணீர் பெருகும். அந்த பரவசத்தில் இருந்து அவளால் மீண்டும் இயல்புநிலைக்கு வர முடியாமல் போகும்.


விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்று பித்துப்பிடித்து நிற்பாள்.அவளைப் போலவே, நம்மை ஆட்கொள்ளக் காத்திருக்கும் சிவனின் தாள் பணிவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.


விளக்கம்: சிரித்தாலும் அழுதாலும் கண்ணீர் வரும். பக்திப்பரவசத்தில் மூழ்கினாலும் கண்ணீர் பெருகும் என்பதற்கு இந்தப் பாடல் எடுத்துக்காட்டு.

Meaning:
Now and then she utters, "My Lord", thus her mouth never relent in the praise of the glory of Our Lord ! With the mind rejoicing, never stopping long streams of tears wetting the eye, not even once coming to this world, not bowing down to the celestial powers, to the Emperor one becomes mad like this. One who takes slaves like this, that Proficient's foot, Oh girls of ornated breasts, let us sing and swim in the floral stream. 

Friday 30 December 2011

14. Though promised earlier to arouse all, this girl is blamed.

வெள்ளி டிசம்பர்,30, 2011
மார்கழி 14, கர வருடம்



திருப்பாவை
பாடல் - 14


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து
ஆம்பல் வாய் கூம்பின் காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

பொருள்: நாளை காலையில் முன்னதாகவே வந்து உங்களை எழுப்புவேன் என்று வீரம் பேசியவளே! சொன்ன சொல் தவறியதற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர் மலர்ந்தும், ஆம்பல் தலை கவிழ்ந்தும் விட்டது. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, சங்கு முழக்க சென்று கொண்டிருக்கின்றனர். சங்கும் சக்கரமும் ஏந்திய வீரமிக்கவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனை வணங்க, இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

விளக்கம்: ஒன்றைச் சொன்னால், அதை செய்தே தீர வேண்டும். வாக்குறுதி கொடுப்பதும், பிறகு ஒன்றுமே தெரியாதது போல் அப்பாவித்தனமாக நடிப்பதும் இறைவனுக்கு ஏற்புடையதல்ல என்பதும் இப்பாடல் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

 In your backyard garden pond
        Lotus hath opened its petals benign;
     Lily hath closed its petals as a cone;
        Lo! Brick power hue attir'd
     White-toothed monks are afoot
        To trumpet conch in their temple divine;
     Vouched to arouse us, pompously you mouth
        Vivacious your tongue lassie unabashed;
        His eye is a la lotus; and arm a hillock fine
        Toting conch and wheel that shines.
        Arise, sing! Listen and consider, our damsel.
திருவெண்பாவை- பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பொருள்: காதணிகள் ஆட, தங்கநகைகள் ஆட, கூந்தல் ஆட, அக்கூந்தலில் சூடியுள்ளமலர்களை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம்பலத்தில் நடனமிடும் சிவனின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லுங்கள். ஜோதி வடிவாய் காட்சி தரும் சிவனின் வீரச்செயல்களை பேசுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி கூறுங்கள். முதலும் முடிவும் இல்லாத இறைவனின் புகழ் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மை விலக்கும், அவனது திருவடி சிறப்பு பற்றி பேசிக்கொண்டே நீராடுங்கள்.

விளக்கம்: மார்கழியில் கத்துகிற ஒலிபெருக்கி தேவையில்லை. "நமசிவாய' என்ற மந்திரம் நம் வாயில் இருந்து ஒலிக்க வேண்டும். காலையில் புனித நீராடும் போது, அந்த சிவனின் திருநாமங்களும், அவனது சிறப்புகளுமே நினைவுக்கு வர வேண்டும். மற்ற சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்தால் தான், புனித நீராடலின் முழுபலனும் கிடைக்கும் என்ற கருத்தை இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது.
Meaning:
The earring dancing, worn ornaments dancing, the Lady's plait dancing, the crowd of gasps dancing, bathing in the chill water, singing the Tiny Hall, singing the Meaning of vEdhAs, singing the Being of that, singing the nature of the Luminance, singing the enclading bunch of flower konRai, singing the nature of the Source, singing the Being of the end, singing the nature of the foot of the Lady who brought us up, bathe. 

Thursday 29 December 2011

13. A girl with charming eyes, yet ego centric is awakened.

வியாழன் டிசம்பர், 29, 2011
மார்கழி 13, கர வருடம்

 

திருப்பாவை பாடல் - 13


புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: பறவையாய் உருமாறி வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழித்தவன், ராவணனின் தலையைக் கொய்தவன் நம் நாராயணன். அவனது புகழைப் பாடியபடியே, தோழிகள் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர். கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து, வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் பாடுகின்றன. தாமரை மலர் கண்களையுடைய தோழியே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறி தெரிந்தும், குளிர்ந்த நீரில் நீச்சலடித்து நீராட வராமல் என்ன செய்கிறாய்? நல்மாதமான மார்கழியில் அவனை வணங்குவது சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

விளக்கம்: "காலம் மாறி விட்டது என்று யாராவது சொன்னால், அதனை ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில், நேரத்தை வீணடிப்பது ஒரு வகை திருட்டு என்கிறாள் ஆண்டாள். அதையே "கள்ளம் தவிர்ந்து' என்ற சொல்லால் குறிப்பிடுகிறாள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் காலத்தின் அருமையை உணர்த்தியுள்ளனர் நம் பெரியோர்.

Singing the glory of Him
       Who split the bird's bill and kill'd
    And Him who pluck'd the wicked demon as a weed;
       Girlies all reach'd the site of deity;
    Venus ascended and Jupiter, had slept sunk;
       Birds too clanged behold, belle gild:
    Thy eye, is a la flower or deer  flirting?
       Yet asleep in bed,
       Enjoin to dip and shiver in bath cold;
       Shed off thy stealth untold
       This  day is  auspicious, consider  our damsel.

திருவெம்பாவை பாடல் - 13


பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


விளக்கம்: தோழியே! நாம் குளிக்கும் குளத்தின் நடுவில் கரிய குவளை மலர்களும், சிவந்த தாமரை மலர்களும் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் மிதக்கின்றன. தங்கள் அழுக்கை களைய மக்கள் இங்கு வருகிறார்கள். அவர்கள் "நமசிவாய' என்ற மந்திரத்தை மனதார சொல்கிறார்கள். இந்தக் குளம் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் ஒலிக்க, மார்புகள் விம்ம பாய்ந்து சென்று நீராடுவோம்.


விளக்கம்: குளத்திலுள்ள கரிய குவளை மலர்களை அம்பிகையாகவும், தாமரையை சிவனாகவும், மாணிக்கவாசகர் தன் தெய்வீகப் பார்வையால் பார்க்கிறார். சாதாரண குளத்தில் உடல் அழுக்கு நீங்கும். பக்தி குளத்தில் மன அழுக்கு நீங்கும் என்பது அவரது கருத்து.

Meaning:
Because of the greeny dark kuvaLai flower, because of the fresh bud of the red lotus, because of the buzzing sound of the small-bodied creatures, this brimming pond appears, with the arrival and taking refuge of those who want to wash away their impurities, like our Lordess and our King. Jumping into this pond of lotus floral spring with our conches roaring, anklets clinging each other, breasts booming, bathing pond booming, swim in the pond. 

Wednesday 28 December 2011

12. A girl whose brother doing 'Kainkaryam' to Krishna is awakened.

புதன் டிசம்பர்,  28, 2011

மார்கழி 12, கர வருடம்

திருப்பாவை-பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: பசியால் வாடும் கன்றுகளை எண்ணிய எருமைகள், மடியில் சொரியும் பால் எங்கள் வீட்டு வாசல்களை சேறாக்குகிறது. இப்படி பெருமளவு பால் சொரியும் எருமைகளின் சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனியில், உன் வீட்டு வாசலில் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமான் நாராயணனின் பெருமையைப் பாடிக் கொண்டிருக்கிறோம். நீயோ, பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகு, உனக்கு மட்டும் ஏன் இந்த பேருறக்கம்?


விளக்கம்: "எனக்கென்ன ஆச்சு! நீ வேண்டுமானால் தூங்கு, நாங்கள் போகிறோம் கண்ணனைக் காண' என்று எந்த ஒரு பெண்ணும் கோபத்துடன் கிளம்பவில்லை. பொறுமையுடன் நீண்டநேரமாக காத்து நிற்கிறார்கள். பொறுமையும் ஒரு வகை வழிபாடே. பொறுத்தார் பூமியாள்வார் என்பது இப்பாடல் மூலம் வெளிப்படுகிறது.

திருவெம்பாவை-பாடல் - 12


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்!


பொருள்: தோழியரே! பிறவித்துன்பம் வராமல் தடுக்கும்
கங்கையைத் தலையில் கொண்டவனும், கையில் அக்னியுடன், சிதம்பரம் அம்பலத்தில் நடனமாடும் கலைஞனும், வானம், பூலோகம், பிற உலகங்களை காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான சிவனை, நம் கையில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலியெழுப்ப வணங்குவோம்.இடுப்பிலுள்ள ஆபரணங்கள் ஒலி எழுப்ப, பூக்கள் நிறைந்த பொய்கையில் நீந்தி அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.


விளக்கம்: எதற்காக நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? பிறவித்துயரம் அகலுவதற்கு தானே! அதற்கு என்ன வழி? கங்கையில் நீராடி பாவத்தை தொலைப்பது தான்! அங்கே போக காசில்லையே என்றால், இறைவன் நம் முன்னாலேயே நிற்கிறான், கங்கையை தலையில் சுமந்தபடி! அவனது திருவடியில் எல்லாவற்றையும் விட்டு விட்டு சரணடைந்தால், பிறப்பற்ற நிலை உறுதி.

Meaning:
The One with chaste water(river), whom we chant and dance in order to get rid of the roaring suffering of birth. The Fire Dancer at the tiny hall of nice thillai. Protecting, creating and removing this sky, world and all of us as a play, speaking the (sacred) words, the bangles tingling, the ornating snakes hissing, the bees buzzing on the decorated plait (He dances). Striking the (water in the) floral pond, praising the Golden Foot of the Lord, take bath in this nice water. 

12. A girl whose brother doing 'Kainkaryam' to Krishna is awakened.

புதன் டிசம்பர்,  28, 2011

மார்கழி 12, கர வருடம்

திருப்பாவை-பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: பசியால் வாடும் கன்றுகளை எண்ணிய எருமைகள், மடியில் சொரியும் பால் எங்கள் வீட்டு வாசல்களை சேறாக்குகிறது. இப்படி பெருமளவு பால் சொரியும் எருமைகளின் சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனியில், உன் வீட்டு வாசலில் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமான் நாராயணனின் பெருமையைப் பாடிக் கொண்டிருக்கிறோம். நீயோ, பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகு, உனக்கு மட்டும் ஏன் இந்த பேருறக்கம்?


விளக்கம்: "எனக்கென்ன ஆச்சு! நீ வேண்டுமானால் தூங்கு, நாங்கள் போகிறோம் கண்ணனைக் காண' என்று எந்த ஒரு பெண்ணும் கோபத்துடன் கிளம்பவில்லை. பொறுமையுடன் நீண்டநேரமாக காத்து நிற்கிறார்கள். பொறுமையும் ஒரு வகை வழிபாடே. பொறுத்தார் பூமியாள்வார் என்பது இப்பாடல் மூலம் வெளிப்படுகிறது.

திருவெம்பாவை-பாடல் - 12


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்!


பொருள்: தோழியரே! பிறவித்துன்பம் வராமல் தடுக்கும்
கங்கையைத் தலையில் கொண்டவனும், கையில் அக்னியுடன், சிதம்பரம் அம்பலத்தில் நடனமாடும் கலைஞனும், வானம், பூலோகம், பிற உலகங்களை காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான சிவனை, நம் கையில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலியெழுப்ப வணங்குவோம்.இடுப்பிலுள்ள ஆபரணங்கள் ஒலி எழுப்ப, பூக்கள் நிறைந்த பொய்கையில் நீந்தி அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.


விளக்கம்: எதற்காக நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? பிறவித்துயரம் அகலுவதற்கு தானே! அதற்கு என்ன வழி? கங்கையில் நீராடி பாவத்தை தொலைப்பது தான்! அங்கே போக காசில்லையே என்றால், இறைவன் நம் முன்னாலேயே நிற்கிறான், கங்கையை தலையில் சுமந்தபடி! அவனது திருவடியில் எல்லாவற்றையும் விட்டு விட்டு சரணடைந்தால், பிறப்பற்ற நிலை உறுதி.

Meaning:
The One with chaste water(river), whom we chant and dance in order to get rid of the roaring suffering of birth. The Fire Dancer at the tiny hall of nice thillai. Protecting, creating and removing this sky, world and all of us as a play, speaking the (sacred) words, the bangles tingling, the ornating snakes hissing, the bees buzzing on the decorated plait (He dances). Striking the (water in the) floral pond, praising the Golden Foot of the Lord, take bath in this nice water. 

Tuesday 27 December 2011

Paasuram 11 - Katrukkaravai (. “If Krishna wants me, let Him fast to achieve me”.)

செவ்வாய், டிசம்பர்,27,

மார்கழி 11, கர வருடம்
திருப்பாவை-பாடல் 11

Paasuram - 11

Thou, daughter of a cowherd, who
        Sans a single guilt, milks many a milk-cow
     Daunts arrogance, preempt stuns at its precincts;
        Thy girdle seems a serpent in pit;
     Wild jungle peacock, start!
        All neighbour mates have arrived now
     Entered thy courtyard in grace
        And sing the name of cloud colour'd yet
        Creeper gold!  Unperturb'd and mute
        Drowsest thou; what for, our pet?
        Beloved bride, listen and consider, our damsel.


      திருவெம்பாவை  11


11.
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

வண்டுகள் மொய்க்கின்ற குளத்தில் கைகளால் குடைந்து
நீராடும்பொழுது உன் திருவடிகளைப் பாடி, வழிமுறையாக வந்த
அடியவர்களாகிய நாங்கள் வாழ்வுபெற்றோம். ஐயனே ! ஆர்க்கின்ற
நெருப்பு போன்று சிவந்தவனே ! திருநீறு பூசும் செல்வனே ! சிறிய
இடையையும், மை நிறைந்த அகன்ற கண்களையும் உடைய உமையின்
மணவாளனே ! ஐயா, நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடலில்
உய்யும் அடியார்கள் உய்யும் வகையில் நாங்களும் உய்ந்துவிட்டோம் !
நாங்கள் தளர்வுறாமல் காப்பாயாக !

மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.

11.
moyyAr thadampoykai pukku mugErennak
  kaiyAR kudin^dhu kudain^dhun kazalpAdi
aiyA vaziyadiyOm vAzn^dhON^kAN ArazalpOR
  cheyyAveN NIRAdi chelvA chiRumaruN^gul
maiyAr thadaN^kaN madan^thai maNavALA
  aiyAn^I AtkoN daruLum viLaiyAttin
uyvArkaL uyyum vakaiellAm uyn^dhozin^dhOm
  eyyAmaR kAppAy emaiElOr empAvAy
Meaning:
The pond filled with the reverberations of the flies, bathing in that striking the water with our bud like hands singing your ornated foot, Oh Great, your traditional slaves, we lived. Oh Red one like the fierce fire ! Oh White Ash smeared Rich ! The Lord of the fragrance of the Lady with nicely dyed, well formed eyes and small vulva. Oh Great, in your play of blessing by taking as slaves, the way people get rescued we all got rescued off. Save us.

Monday 26 December 2011

10. A girl with whom “Krishna Himself would fall in love”.

திங்கள் டிசம்பர், 26, 2011
மார்கழி 10, கர வருடம்


திருப்பாவை-பாடல் 10


திருப்பாவை-பாடல் 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொன்னாõர்கள். நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பலின் இருப்பிடமே! கிடைத்தற்கரிய அணிகலனே! தடுமாற்றம் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

விளக்கம்: கோயிலில் திருவிழா என்றால், இடம் பிடிக்க முண்டியடித்து முன்னே நிற்கிறோம். இது சுயநலம். நம்மோடு மற்றவர்களும் சேர்ந்து பார்க்க வேண்டும் என அவர்களுக்கும் இடம் கொடுத்தால், அது பொதுநலம். ஆண்டாள் தான் மட்டுமின்றி, எல்லாரும் இறைவனை அடைய வேண்டும் என்று அழைக்கிறாள். புறப்படுவோமா?

You lady would fast until enter Heaven;
        If one wouldn't open entry, should she not speak?
     Adorn'd  fragrant basil crown, Narayana virtuous
        Bestows the desire on our prayer;
     Of yore consigned Kumbakarna to death.
        Has that demon, lost in contest peak,
     Handed the grand sleep over unto thee?
        Lazy to the core
        Thou shalt precious decor

திருவெம்பாவை  10

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்.              10

அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக்
கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; அவனுடைய
மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப்புறத்தன;
அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ
ஒன்றிரண்டல்ல ! வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும்
துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்;
ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற
குலப்பெண்களான சிவன் கோயிற் பணிசெய்யும் பெண்களே !
அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார்
உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!

சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;
கோது - குற்றம்; பரிசு - வழி.

10.
pAdhALam EzinuN^kIz choRkazivu pAdhamalar
  pOdhAr punaimudiyum ellAp poruLmudivE
pEdhai orupAl thirumEni onRallan 
  vEdhamudhal viNNOrum maNNun^ thudhiththAlum
Odha ulavA oruthOzan thoNdaruLan
  kOdhil kulaththaran than kOyiR piNAppiLLaikAL
Edhavan Ur EdhavanpEr Ar uRRar Ar ayalAr
  Edhavanaip pAdum parichElOr empAvAy
Meaning:
Even below the seven underneath worlds is the Beyond-words Flower of foot ! The Splendid Hair of floral fragrance is the end of all matters !! Female oneside, His Holy Form is not one. Beginning vEdhAs, even if the celestial powers and earth praise, Indescribable, that One Friend, residing in the hearts of His servants. The hara of flawless tradition. Which one is His town ? Which one is His name ? Who related and who not ? What is the way to sing Him ?!

           

10. A girl with whom “Krishna Himself would fall in love”.



திங்கள் டிசம்பர், 26, 2011
மார்கழி 10, கர வருடம்


திருப்பாவை-பாடல் 10


Tamil

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொன்னாõர்கள். நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பலின் இருப்பிடமே! கிடைத்தற்கரிய அணிகலனே! தடுமாற்றம் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.


விளக்கம்: கோயிலில் திருவிழா என்றால், இடம் பிடிக்க முண்டியடித்து முன்னே நிற்கிறோம். இது சுயநலம். நம்மோடு மற்றவர்களும் சேர்ந்து பார்க்க வேண்டும் என அவர்களுக்கும் இடம் கொடுத்தால், அது பொதுநலம். ஆண்டாள் தான் மட்டுமின்றி, எல்லாரும் இறைவனை அடைய வேண்டும் என்று அழைக்கிறாள். புறப்படுவோமா?


You lady would fast until enter Heaven;
        If one wouldn't open entry, should she not speak?
     Adorn'd  fragrant basil crown, Narayana virtuous
        Bestows the desire on our prayer;
     Of yore consigned Kumbakarna to death.
        Has that demon, lost in contest peak,
     Handed the grand sleep over unto thee?
        Lazy to the core
        Thou shalt precious decor

திருவெம்பாவை  10

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்.              10

அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக்
கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; அவனுடைய
மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப்புறத்தன;
அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ
ஒன்றிரண்டல்ல ! வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும்
துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்;
ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற
குலப்பெண்களான சிவன் கோயிற் பணிசெய்யும் பெண்களே !
அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார்
உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!

சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;
கோது - குற்றம்; பரிசு - வழி.

10.
pAdhALam EzinuN^kIz choRkazivu pAdhamalar
  pOdhAr punaimudiyum ellAp poruLmudivE
pEdhai orupAl thirumEni onRallan 
  vEdhamudhal viNNOrum maNNun^ thudhiththAlum
Odha ulavA oruthOzan thoNdaruLan
  kOdhil kulaththaran than kOyiR piNAppiLLaikAL
Edhavan Ur EdhavanpEr Ar uRRar Ar ayalAr
  Edhavanaip pAdum parichElOr empAvAy
Meaning:
Even below the seven underneath worlds is the Beyond-words Flower of foot ! The Splendid Hair of floral fragrance is the end of all matters !! Female oneside, His Holy Form is not one. Beginning vEdhAs, even if the celestial powers and earth praise, Indescribable, that One Friend, residing in the hearts of His servants. The hara of flawless tradition. Which one is His town ? Which one is His name ? Who related and who not ? What is the way to sing Him ?!

           



Sunday 25 December 2011

9. “It is the duty of Krishna to seize me and to own me”.

டிசம்பர்,  25, 2011
மார்கழி 9, கர வருடம்



திருப்பாவை-பாடல் - 9


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய


தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
விளக்கம்: நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிலும் விளக்கெரிய,
திரவியங்கள் நறுமணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை நீண்ட நேரமாக அழைத்தும் அவள் பதில் சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் ஆட்கொண்டு விட்டதா? ஏதாவது மந்திரத்திற்கு ஆட்பட்டு எழ முடியாமல் ஆகி விட்டாளா? தோழியே! உடனே எழு. மாயங்கள் செய்பவன், மாதவன், வைகுண்டவாசன் என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்லி உருகிடு.


விளக்கம்: பஞ்சணை சுகம் உள்ளிட்டவற்றை தரும் ஆடம்பர உலகத்தில், பெறும் தற்காலிக சுகத்தால் இங்கேயே இருக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்கிறது. ஆனால், நிரந்தர இன்பம் பரந்தாமனின் திருவடியில் தான். "தற்காலிகமா, நிரந்தரமா...முடிவு செய்ய வேண்டியது நீங்களே' என்கிறாள் ஆண்டாள்

  Mansion studded with pure precious stones
       Wicks  of  light all around gleaming
    Asleep a couch perfume afloat;
       Thou, uncle's daughter, unlock the door bedeck'd;
    Auntie, would you arouse her?
       Is your daughter dumb, deaf, lazy and dreaming?
    Accurs'd to a grand sleep with a sentry?
       Extol Him as Madhava,
       Great Hypnotist, Mukuntha,
       And so forth chant the Vaigunta;
       Listen and consider, our damsel.

திருவெம்பாவைபாடல் - 9


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே


பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே


உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
பொருள்: பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையானவனே! சிவபெருமானே! உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, கீழ்ப்படிதலுடன் செய்வோம். இந்த பிரார்த்தனையை நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையை அடைவோம்.
விளக்கம்: ஒழுக்கமுள்ள பக்திமானை பெண்கள் தங்கள் கணவராக மனமுவந்து ஏற்பர் என்பதை இந்த பாடல் வெளிப்படுத்துகிறது.



Saturday 24 December 2011

8. “A girl beloved to Krishna and could conquer Him” -- is aroused.

 சனி டிசம்பர், 24, 2011
மார்கழி, 8, கர வருடம்


திருப்பாவை


கீழ்வானம் வெள்ளென்று எருமைச்சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப்போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்ப் பாடிப் பறைகொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


பொருள்: அழகுச்சிலையே! கிழக்கே வெளுத்ததடி! கீழ்வானம் சிவந்ததடி! மேய்ச்சலுக்கு எருமைகள் தயாராகி விட்டன. எல்லாத் தோழிகளும் நீராடச் செல்வதற்கு அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறோம். உன்னை எத்தனை தடவை தான் அழைப்பது? குதிரை வடிவில் வந்த கேசி என்ற அரக்கனின் வாய் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட மல்லர்களை வென்றவனும், தெய்வத்துக்கெல்லாம் தெய்வமான கண்ணனை நாம் வணங்கினால், அவன் "ஆஆ' என்று அலறியபடியே அருள் செய்வான் .


விளக்கம்: பக்தன் பெரியவனா, பகவான் பெரியவனா என்றால் பக்தனே பெரியவன். அதனால் தானே யசோதையின் துண்டுக் கயிறுக்கு கட்டுப்பட்டான் சின்னக்கண்ணன். தெய்வத்தை நாம் பக்திப்பூர்வமாகப் பிடித்துக் கொண்டால், அலறியபடி நமக்கு அருள் செய்யுமாம்.

Orient sky is pale; the buffalo
       Before gives milk plods to graze the field, Lo!
    Girls go abreast in gang and the remnant
       Are told to await to have thee;
    We call at thee astand; girl zealot!
       If we pray, procure the desire our vow
    By reaching the Divine among Divine and sing
       Him who had split snout of the devil
       Kill'd wrestlers and quell'd;
       He shall hearken our welfare and spell;
       Arise, listen and consider, our damsel.
திருவெம்பாவை


கோழி சிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.


பொருள்: ""உறக்கத்துக்கு சொந்தமான தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. வாத்தியங்கள் ஒலிக்கின்றன. கோயிலில் வெண் சங்கு முழங்குகிறது. உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகிறோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய்.இன்னும் பேசமாட்டேன் என்கிறாய்! நீ வாழ்க! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்) அப்படிப்பட்ட பெருமையுடையவனும், உலகத்துக்கே தலைவனானவனுமான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.


விளக்கம்: காலையில் கோயிலுக்குச் செல்வது இனிய அனுபவம். அமைதியான அந்த வேளையில் இயற்கையை ரசித்தபடியே செல்வது மனதிற்கு எத்தனை நிம்மதி! மார்கழி குளிரில், ஆற்றில் நீராடுவது எத்தனை இனிய அனுபவம்! அனுபவித்து பாருங்கள், அருமை புரியும்.

 

DECEMBER 4th . 2011 WEEK. PARAYANAM

849th week
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத சுவாமி நமஹா  :

24-12-2011 TIME 5.00 P.M
 (this WEEK PARAYANAM)
ஸ்ரீ Vishwanathan அவர்கள் அகத்தில் .   
(IN THE RESIDENCE OF  Mr. Vishwanathan ). 
B-5/62 C DHAWAL GIRI , SECTOR-34, NOIDA 
CONTACT NO: 09650909386 
TODAY HAUNMAN JAYANTHI
Bhajan 6.30 P.M.

FOLLOWED BY DINNAR
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா


Friday 23 December 2011

7. Awakening another who is asleep due to memory failure.

வெள்ளி டிசம்பர் 23, 2011
மார்கழி 7, கர வருடம்




திருப்பாவை-பாடல் - 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பொருள்: தூக்கம் என்னும் பேயிடம் சிக்கியவளே! விடிந்ததால் வலியன்குருவிகள் கீச்சிடுகின்றன. அவை தங்கள் துணையுடன் பேசுகின்றன. இந்த ஒலி உன் காதில்
விழுகிறதா? நறுமணம் மிக்க கூந்தலை உடைய ஆயர்குலப் பெண்கள் தயிர் கடையும் ஒலியும், அவர்களது கழுத்தில் அணிந்துள்ள மாங்கல்யம் ஒலியெழுப்புகிறதே! இதுவுமா கேட்கவில்லை! எங்கள் எல்லாரையும் நீராடலுக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னவளே! நாங்கள் நாராயணனான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்குகிறாயே! ஒளிமுகம் கொண்டவளே! வீட்டுக்கதவைத் திற.

விளக்கம்: இயற்கையை ரசிப்பதற்கென்றே விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும்.
பறவைகள் அங்குமிங்கும் பறப்பதையும், அவை உணவுதேடி அதிகாலையிலேயே தங்கள்
பணியைத் துவங்குவதைபார்த்து, ஐந்தறிவுள்ள அந்த ஜீவன்களிடம் மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்கிறாள் ஆண்டாள்.

Can't thou listen to the kingcrow mingled all around?
       The clatter--’Keesu Keesu’, a medley
    Gurgling noise of curd by churndash
       Hands moving see-saw, to alter,
    Of Ayar women with tresses fragrant and
       Coins clanking in their necklace seedy;
    Thou devilish lass, our chief, conceive;
       As we sing Narayana moorthy Kesava
       Shouldst thou lie-along well orient'd?
       Lay open thou radiant
       Listen and consider our damsel.


திருவெம்பாவை-பாடல் - 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோரும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்: பெண்ணே! உனது சிறப்புத்தன்மையில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால்
சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும் சிவனைப் போற்றுபவளே! திருநீறு, ருத்ராட்ச சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே "சிவசிவ' என்பவளே! "தென்னாடுடைய சிவனே போற்றி' என நாங்கள் சொல்லும் போது, தீயிலிட்ட மெழுகு போல் உருகி உணர்ச்சி வசப்படுபவளே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.இதையெல்லாம் கேட்டும், நீ இன்று உறங்குவதற்கு காரணம் என்ன? இனியவளே! இறுகிப்போன மனதுடன், இன்னும் எழாமல் இருக்கிறாயே! இந்த தூக்கத்தை ஒரு பரிசாக நினைக்கிறாயோ?

விளக்கம்: எத்தனையோ கிரகப்பெயர்ச்சிகள் வருகின்றன, போகின்றன. ஆனால், "நமசிவாய' மந்திரம் இருக்கும் போது நாளும் கோளும் என்ன செய்யும் என்று வாழ்வோரும் உண்டு. அந்த சிவனை மனதார நினைக்க உகந்த மாதம் மார்கழி. உறங்கும் இந்த பெண்ணைப் போல, நாமும் அதை தவற விடலாமா?

Thursday 22 December 2011

6. Awakening a mate who is new for Bhagwath matter.

வியாழன்,   டிசம்பர்,  22,  2011

மார்கழி  6, கர வருடம்

திருப்பாவை - பாடல் - 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்!
 பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


பொருள்: தோழியே! உடனே எழு! பறவைகள் கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலின் கோயிலில் வெண்சங்கு எழுப்பும் ஓசை கேட்கவில்லையா? தன்னைக் கொல்ல வந்த பூதனையிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைக் குடித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடனின் உயிரைப்பறித்தவனுமான கண்ணனை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி' என்று அழைக்கும் குரல் உனக்கு கேட்கிறதா! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.


விளக்கம்: காலையில் எழுந்ததும் "ஹரி ஹரி' என ஏழுமுறை சொன்னால், செய்த பாவமெல்லாம் தீர்ந்து போகும். அதையே மார்கழியில் சொன்னால், பரமபதத்தையே அடைந்து எம்பெருமானின் திருவடி நிழலில் பரமானந்தமாக வாழலாம் என்கிறாள் ஆண்டாள்.

Behold! Birds clanged; whitish conch
       At the abode of eagle's king is blaring;
    Won't thou listen? Lassie arise!
       Poison, He sucked from devil' s breast
    Kicked deftly the treacherous cart, to a shatter
       On the serpent alighted in ocean had set sleeping;
    Kept this seed in mind, monks and yogis
       Arise gently and Hari they mumble;
       This  chant pierces the mind as a rumble;
       Awakens and enthuses like a roar to assemble
       Listen and consider, our damsel.

திருவெம்பாவை - பாடல் - 6
மானே நீ நென்னலை நாளை வந்து எங்களை
நானே எழுப்புவன் என்றாலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவறியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து
ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு
உன் வாய் திறவாய்
ஊனே உருவாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்


பொருள்: மான் போல் நடப்பவளே! நேற்று நீ எங்களிடம், "உங்களை நானே அதிகாலையில் எழுப்புவேன்' என்று பெருமை அடித்தாய். ஆனால், உறங்கி விட்டாய். உன்னையே நாங்கள் வந்து எழுப்பும்படியாகி விட்டது. உன் வாக்குறுதி போன திசை எங்கே? சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்படுகிறாயா? தேவர்கள் உள்ளிட்ட யாராலும் அறிய முடியாத பெருமையுடைய சிவனின் திருவடிகளைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கும், எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்தாலே உடலும் உள்ளமும் உருகி விடும். உனக்கு அந்த உருக்கம் ஏற்படாதோ? உடனே எழு. எல்லோருடனும் இணைந்து நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.


விளக்கம்: வாக்குறுதி கொடுப்பதை விட, அதை நிறைவேற்றுவது மிக மிக முக்கியம். இல்லாவிட்டால், சமுதாயத்தில் அவப்பெயர் தான் ஏற்படும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

 

Wednesday 21 December 2011

5. Cow girls eternally in crime. Could they succeed and achieve their objective?

புதன் ,டிசம்பர்,21, 2011

மார்கழி 5, கர வருடம்

திருப்பாவை-பாடல் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள்: மாயக்காரனும், மதுராபுரியில் பிறந்தவனும், சுத்தமான வெள்ளமாய் பெருகியோடும் யமுனைக்கரையில் விளையாடியவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகியின் வயிற்றுக்கு பெருமை சேர்த்தவனும், உரலில் தாம்பு கயிற்றால் கட்டப்பட்டதால் தாமோதரன் என பெயர் பெற்றவனுமான கண்ணனை, தரிசிக்க நாங்கள் நன்னீராடி, மணக்கும் பூக்களுடன் புறப்படுகிறோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே செய்த பாவங்களும், செய்கின்ற பாவங்களும் நெருப்பில் பொசுங்கிய தூசு போல காணாமல் போய்விடும்.

விளக்கம்: எந்த நதியாயினும் அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை "தூய பெருநீர் யமுனை' என்கிறாள் ஆண்டாள். நதிகளில் கழிவுநீரைக் கலக்கக்கூடாது. அவற்றை தெய்வமாய் போற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் நாட்டில் மட்டுமே தெய்வம் குடியிருக்கும். ஆறுகளைப் பாதுகாப்பதின் அவசியத்தை இந்தப்பாடல் மூலம், அன்றே வலியுறுத்தியிருக்கிறாள் ஆண்டாள்.

The elusive son of blooming North Mathura;
       Riverman de facto of grand Yamuna pure;
    Appear'd in Ayar tribe a glow lamp and
       Brought sanctity to mother's womb;
    If we reach pure, shower fine flower and
       Worship Him, Damodara the Lure;
    With song in lips, mind engross'd,
       The sins committed deliberate  or inadvertent
       In the past, present and future entire
       Shall be burnt a refuse in bonfire;
       Prithee, listen and consider, our damsel.

திருவெம்பாவை-பாடல் 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

பொருள்: ""வாசனைத் திரவியம் தடவிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான தோழியே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் வடிவெடுத்து சென்றும், நம் சிவனின் உச்சியையும், பாதங்களையும் காண முடியவில்லை. "மலை வடிவான நம் அண்ணாமலையார் நமக்குச் சொந்தமானவர் தானே!' என்று நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல...இவ்வுலகில் உள்ளவர்களாலும், தேவர்களாலும் அவரைப் பற்றி அறிய முடியாது. பெருமைக்குரிய அந்த நமசிவாயத்தை உணர்ச்சிப்பெருக்குடன்"சிவசிவ' என்று அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற,'' என்று தோழியை எழுப்புகிறார்கள்.

விளக்கம்: ""நம் ஊரில் தானே கோயில் இருக்கிறது. சுவாமி எங்கே போகப் போகுது! இங்கே தானே இருக்கும்! அவர் நம்ம சுவாமி தானே! நாளைக்குப் போகலாம் அவரைத் தரிசிக்க'' என்று சொல்லும் அதிகாரம் நம்மிடமில்லை. ஏனெனில், நாளை என்பது நம்மிடம் இல்லை. அது அவன் கையில்! எனவே, இன்றே இப்போதே வழிபாடு செய்து விடுங்கள் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

Tuesday 20 December 2011

4th day Rain dear to Andal--exposition of Vishistadvaita


மார்கழி 4

.செவ்வாய், டிசம்பர்,20,

மார்கழி 4, கர வருடம் 
 
திருப்பாவை - பாடல் 3  ஆண்டாள் .
 Tamil


 Oh! Rain! Gracious alike ocean, pupil of my eye;
       Thou shalt never flout this attitude
    Enter sea, emerge replete, ascend a mass dark in space;
       Colour a la form of Lord Eternal, Let lightning flash
    Thunder shoot as wheel and dextrogyral
       In the hands of Padmanabha, His arms a fortitude;
    Brook no delay, force a cloud burst;
       Pour down as would darts from Sarnga lash
       To facilitate life on earth bright;
       And the Margali bath to our  delight;
       Listen and consider, our damsel.

திருவெம்பாவை - 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்.
தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
""முத்து போல் பிரகாசிக்கும் பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா பொழுது விடியவில்லை?'' என்று கேலி செய்த பெண்களிடம், உறங்கியவள், "" கிளி போல் பேசும் எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா?'' என்று கேட்டாள். எழுப்ப வந்தவர்கள்,""அடியே! இங்கே இருப்பவர்கள் எத்தனை பேர் என இனிமேல் தான் எண்ணிச் சொல்ல வேண்டும். அமரர்களைக் காப்பவராகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியாது. ஆகவே, நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்துக் கொள். நீ எதிர்பார்க்கும் அளவு பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு,'' என்று கேலி செய்தனர்.
விளக்கம்: யாரெல்லாம் கோயிலுக்குப் போகிறார்கள்? அங்கு செல்வதால் பலனடைந்தவர்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் விசாரித்த பிறகு இறைவனை வணங்குவதால் பலனேதும் இல்லை. இவ்வகை பிரார்த்தனை சுயநலம்
சார்ந்ததாக அமையும். எதிர்பார்ப்பு ஏதுமின்றி, இறைவனை வணங்குவதில் முந்துபவரில் நீங்கள் முதன்மையாய் இருக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்பொருள்.


 
 
 ,.
.

Monday 19 December 2011

மார்கழி ,3

IN ENGLISH VERSION
3. Blessings the country would achieve.
Tamil
  Should we sing the name of the magnanimous
       Outgrown and meted the world and assent
    To bathe for deity, rain it shall, pour country over
       Thrice monthly with no despair;
    Shall facilitate tall growth of fine paddy crop.
       Carp to jump amidst like aquabatic feat,
    Spotted bee to perch on lily fair and 
       Donor cows to stand still, with udders thick,
       Allow milking to fill vessels copious;
       To ordain never vanishing wealth bounteous;
       Listen and consider our damsel.

மார்கழி ,3

திங்கள் ,டிசம்பர்,19, 2011


மார்கழி ,3, கர வருடம் 


திருப்பாவை - பாடல் 3  ஆண்டாள் 

பாடிய திருப்பாவை

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனது பெருமை குறித்து பாடவும், பாவைக்கு மலர் சாத்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம். இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும். வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும். குவளை பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள் வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும்.

விளக்கம்: ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாகிய திருமாலை வணங்கினால், என்னென்ன கிடைக்கும் என்பதை ஆண்டாள் பட்டியல் இடுகிறாள். இங்கே தனது தேசப்பற்றை வெளியிடுகிறாள். தங்கள் ஊர் மட்டுமின்றி தேசமே செழிக்க மார்கழி நோன்பு வகை செய்யும் என்று கருத்து தெரிவிக்கிறாள். நாமும், உலக நன்மைக்காக திருமாலிடம் மன்றாடுவோமே!

திருவெம்பாவை - பாடல் 3   மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

பொருள்: முத்துப்பல் சிரிப்பால் மயக்கும் தோழியே! முன்பெல்லாம், நாங்கள் வந்து எழுப்பும் முன் நீயே எழுந்து இறைவனை வணங்க தயாராக இருப்பாய். சிவனே என் அதிபதி என்றும், இனியவன் என்றும் அழகாக பேசுவாய். இன்றோ, இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற,'' என்கிறார்கள். தூங்கிக் கொண்டிருந்தவள், ""களைப்பில் உறங்கி விட்டேன். அதற்காக, என் மீது கடுஞ்சொற்களை வீச வேண்டுமா? நீங்கள் பக்தி செலுத்துவதில் அனுபவஸ்தர்கள். நானோ புதியவள். இந்த இளையவள் செய்த தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே!'' என வருந்தினாள். தோழியர் அவளிடம், ""இளையவளே! இறைவன் மீது நீ வைத்துள்ள அன்பின் பெருமையும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை நினைக்க முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ விரைந்து எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம்,'' என்றனர்.

விளக்கம்: இளமையில் கிடைக்கும் மகிழ்ச்சி ஒரு மாயை. இந்த நேரத்தில் இறைவனைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை. குடும்பத்தில் சிக்கி, பிள்ளைகள், உற்றார் உறவினரால் ஏற்படும் கஷ்டங்களையெல்லாம் அனுபவித்து, முதுமையை எய்தும் போது தான் அவன் நினைப்பு வருகிறது. எனவே இளமையிலேயே இறைவனை வணங்குங்கள் என்கிறார் மாணிக்கவாசகர்.