Saturday 31 December 2011

15. A typical Vaishnavite, this girl allows herself to be blamed.

சனி டிசம்பர், 31, 2011
மார்கழி, 15, கர வருடம்


திருப்பாவை பாடல் - 15


எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.


பொருள்: ""இளமையான கிளியே! உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், எப்படியெல்லாமோ அழைத்தும் இன்னும் உறங்குகிறாயே?'' என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.


அந்த தோழி, ""கோபப்படாதீர்கள்! இதோ வந்து விடுகிறேன்,'' என்கிறாள்.உடனே தோழிகள், ""உன்னுடைய @பச்” மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது கோபிக்காதே என்கிறாயே,'' என்று அதட்டினர்.அதற்கு அவள், ""சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை என்பது நிஜமே! நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருந்து விட்டு போங்கள்,'' என்று பதிலுக்கு கோபிக்கிறாள்.


""அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன சிறப்பு உன்னிடம் இருக்கிறது?'' என்று மீண்டும் கடிகிறார்கள் தோழிகள்.வீட்டுக்குள் இருந்தவளும் விடவில்லை. ""நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?'' என்கிறாள்
.தோழிகள் அவளிடம், ""நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே கிளம்பு,'' என்கிறார்கள்.

விளக்கம்: இந்தப் பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமையாக பாடியிருக்கிறாள் ஆண்டாள். தோழிகளும் தான் எவ்வளவு பொறுப்பார்கள்! கோபத்தில் தோழியைத் திட்டித் தீர்த்து விட்டார்கள். கோபத்தில் கோபமான சம்பவங்கள் தானே வெளிப்படும். இந்தப்பாட்டிலும், கண்ணன் கோபத்துடன் போரிட்ட சம்பவங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

“Hey, tiny parrot, yet asleep;”
         “Don't shriek, girls! I have come”
     “Thou are adept in essays,
          Erelong thy tongue we know”
     “You are eloquent or let myself be;”
         “Lo! Would 'st thou move out soon?
     What's that special in thee?” ”Have all come?”
         “Have come, count thou apprehensive”
         We will sing the Elusive
         Who had crush'd the tusker mighty massive
         And shatter'd hostile; listen and consider, our damsel.

திருவெம்பாவை பாடல் - 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.


பொருள்: மார்புக்கச்சையும், ஆபரணமும் அணிந்த பெண்களே! நம் தோழி "எம்பெருமானே' என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை விடாமல் பேசுவாள். அப்போது அவளது கண்களில் கண்ணீர் பெருகும். அந்த பரவசத்தில் இருந்து அவளால் மீண்டும் இயல்புநிலைக்கு வர முடியாமல் போகும்.


விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்று பித்துப்பிடித்து நிற்பாள்.அவளைப் போலவே, நம்மை ஆட்கொள்ளக் காத்திருக்கும் சிவனின் தாள் பணிவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.


விளக்கம்: சிரித்தாலும் அழுதாலும் கண்ணீர் வரும். பக்திப்பரவசத்தில் மூழ்கினாலும் கண்ணீர் பெருகும் என்பதற்கு இந்தப் பாடல் எடுத்துக்காட்டு.

Meaning:
Now and then she utters, "My Lord", thus her mouth never relent in the praise of the glory of Our Lord ! With the mind rejoicing, never stopping long streams of tears wetting the eye, not even once coming to this world, not bowing down to the celestial powers, to the Emperor one becomes mad like this. One who takes slaves like this, that Proficient's foot, Oh girls of ornated breasts, let us sing and swim in the floral stream. 

No comments:

Post a Comment