Saturday 24 December 2011

8. “A girl beloved to Krishna and could conquer Him” -- is aroused.

 சனி டிசம்பர், 24, 2011
மார்கழி, 8, கர வருடம்


திருப்பாவை


கீழ்வானம் வெள்ளென்று எருமைச்சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப்போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்ப் பாடிப் பறைகொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


பொருள்: அழகுச்சிலையே! கிழக்கே வெளுத்ததடி! கீழ்வானம் சிவந்ததடி! மேய்ச்சலுக்கு எருமைகள் தயாராகி விட்டன. எல்லாத் தோழிகளும் நீராடச் செல்வதற்கு அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறோம். உன்னை எத்தனை தடவை தான் அழைப்பது? குதிரை வடிவில் வந்த கேசி என்ற அரக்கனின் வாய் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட மல்லர்களை வென்றவனும், தெய்வத்துக்கெல்லாம் தெய்வமான கண்ணனை நாம் வணங்கினால், அவன் "ஆஆ' என்று அலறியபடியே அருள் செய்வான் .


விளக்கம்: பக்தன் பெரியவனா, பகவான் பெரியவனா என்றால் பக்தனே பெரியவன். அதனால் தானே யசோதையின் துண்டுக் கயிறுக்கு கட்டுப்பட்டான் சின்னக்கண்ணன். தெய்வத்தை நாம் பக்திப்பூர்வமாகப் பிடித்துக் கொண்டால், அலறியபடி நமக்கு அருள் செய்யுமாம்.

Orient sky is pale; the buffalo
       Before gives milk plods to graze the field, Lo!
    Girls go abreast in gang and the remnant
       Are told to await to have thee;
    We call at thee astand; girl zealot!
       If we pray, procure the desire our vow
    By reaching the Divine among Divine and sing
       Him who had split snout of the devil
       Kill'd wrestlers and quell'd;
       He shall hearken our welfare and spell;
       Arise, listen and consider, our damsel.
திருவெம்பாவை


கோழி சிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.


பொருள்: ""உறக்கத்துக்கு சொந்தமான தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. வாத்தியங்கள் ஒலிக்கின்றன. கோயிலில் வெண் சங்கு முழங்குகிறது. உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகிறோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய்.இன்னும் பேசமாட்டேன் என்கிறாய்! நீ வாழ்க! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்) அப்படிப்பட்ட பெருமையுடையவனும், உலகத்துக்கே தலைவனானவனுமான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.


விளக்கம்: காலையில் கோயிலுக்குச் செல்வது இனிய அனுபவம். அமைதியான அந்த வேளையில் இயற்கையை ரசித்தபடியே செல்வது மனதிற்கு எத்தனை நிம்மதி! மார்கழி குளிரில், ஆற்றில் நீராடுவது எத்தனை இனிய அனுபவம்! அனுபவித்து பாருங்கள், அருமை புரியும்.

 

No comments:

Post a Comment