Friday 16 March 2012

861 Weekly parayanam on 17-03-2012 ON SATURDAY

861th weekly parayanam on 17-03-2012 ON SATURDAY


ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

( 861TH WEEK ) in the residence of
Mr Srinivasan
B-12  House No. 47B
DWALGIRI APPARTMENTS SECTOR 34 NOIDA
TIME : 7.30 P.M.
17-03-2012
ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

Friday 9 March 2012

860th weekly parayanam on 10-03-2012 ON SATURDAY

860th weekly parayanam on 10-03-2012 ON SATURDAY


ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

( 860TH WEEK ) in the residence of
Mr Kannan
B-10 105B
UDAIGIR-II APPARTMENTS SECTOR 34 NOIDA
TIME : 7.30 P.M.
10-03-2012
ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

Saturday 3 March 2012


859th weekly parayanam on 03-03-2012 ON SATURDAY

ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

( 859TH WEEK ) in the residence of
Mr Venkatraman
B-10 153B
UDAIGIR-II APPARTMENTS SECTOR 34 NOIDA
TIME : 7.30 P.M.
03-03-2012


ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண
sri vishnu sahasranama satsangam

Friday 17 February 2012

856th weekly parayanam on 18-02-2012 ON SATURDAY



ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

( 856TH WEEK )
B-10 SHIV MANDIR
UDAIGIRI-II SECTOR 34 NOIDA
TIME : 7.00 P.M.
18-02-2012

ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

Friday 10 February 2012

855th weekly parayanam on 11-02-2012 ON SATURDAY

ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

( 855TH WEEK )
 இந்த வாரம்
 ஸ்ரீ ARVIND BABU (அர்விந்த் பாபு) .
B-14 HOUSE NO. 177 HIMAGIRI SECTOR-34 NOIDA

TIME : 7.30 P.M.
11-02-2012

ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண



 

Saturday 4 February 2012

THIS WEEK PARAYANAM ON 4TH FEBRUARY 2012 SATURDAY


February 1ST. WEEK. PARAYANAM

ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

 4-2-2012 
 இந்த வாரம் பாராயணம் (this WEEK PARAYANAM) .   
(IN THE RESIDENCE   Shri Narashiman). 
C-87, SECTOR-40, NOIDA 

WITH DINNER 
ASSEMBLE AT MOTHER DAIRY SECTOR 34 NOIDA AT 6:30 PM

ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

Friday 27 January 2012

854th weekly parayanam and Sri Radha Kalyana Mahotsavam

ஓம் நமோ நாராயண  ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண 

 854th weekly parayanam  (இந்த வார  பாராயணம்)

தமிழ் மாதம்  தை மாதம் 14     கர வரடம்

Sri Adi Sankara Temple
A-52 NOIDA DADRI ROAD, SECTOR-42
SECTOR-42 NOIDA - 201 307
UTTAR PRADESH

TIME: 5.00 P.M.                   DAY:  SATURDAY
Sri Radha Kalyana Mahotsav
Sri Vishnu Sahasranama Satsangam Sector-34 Noida
Seventeenth year Celebrations - 2012
Programme Details
28-01-2012 SATURDAY
 6.00 AM to 07.00 AM : Sri Maha Ganapathy Homam
7.00 am to 7.30 am : Mukurthakaal
07.30 am to 8.30 am :
Sri Venkatesa Suprapadam followed
 by Sri Vishnu Sahasranama Parayanam
Nama Sankeerthanam
10.30 am to 1.30 pm
Thodaya Mangalam, Guru Dhyanam, Ashtapadi Bhajans
02.30 pm to 05.00 pm
Nama Sankeertanam (Continue)
Ashtapadi Bhajans
05.00 pm to 6.00 pm
 Sri Vishnu Sahasranama Parayanam
06.00 pm to 7.00 pm
 Pancharatna Kritis
7.00 pm to 8.00 pm
 Dhyanam/Abhangam Bhajans
9.00 pm to 11.30 pm
Pooja, Divyanamam, Harati

ஓம் நமோ நாராயண  ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண 

Monday 16 January 2012

அதர்மத்தை அழித்து, தர்மத்தை அளிக்கும் சிங்கர்குடி உக்கிர நரசிம்மர்

அதர்மத்தை அழித்து, தர்மத்தை அளிக்கும் சிங்கர்குடி  உக்கிர நரசிம்மர்


ம் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட அனைத் தையும் அளந்து விடலாம். எல்லாவற்றிற்கும் ஓர் அளவுகோல் உண்டு. ஆனால்... நம்மால் அளவிட முடியாத ஒன்று இவ்வுலகில் உண்டு. அது என்ன? 
அதுவே தெய்வங்களின் இறையருளாகும். 

இறையருளில் கலந்திருப்பது அன்பு... 

அன்பு... அன்பு... அளவற்ற அன்பு, அளவற்ற கருணை, அளவற்ற சக்தி... அளவற்ற ஆற்றல்! இவ்விதம் அனைத்திலும் அளவில்லாத இறைவனின் அருள், இருள் நீக்கும் ஒளியாகச் செயல்படுகிறது. 
 
தீயவன் நல்லவனாகவும், வறியவன் வளம் கொழிக்கும் செல்வந்தனாகவும், நோயாளி திடகாத்திரமான ஆரோக்யசாலிலியாகவும், கல்விஅறிவு இல்லாதவன் உயர்கல்வியைப் பெற்று சிறந்த கல்வியாளனாகவும், ஏன்... கவிஞனாகவும்கூட ஆகிறான்- தெய்வங்களின் சக்தியால்.

தீமைகளை அழித்து நல்லன அளிப்பது தெய்வசக்தி. மனிதர்களின் ஆணவம், அகம் பாவம்... இன்னும் பற்பல துர்க்குணங்களை அழித்து, அவனை நல்ல மனிதனாக மாற்று வதும் இறைசக்தி!

திருந்தக் கூடியவர்களைத் திருத்துபவன் அவன்! திருந்த மறுப்பவர்களை அழித்துவிடக் கூடியவனும் அவனே. அத்தகைய வலிலிய சக்தி கொண்ட தெய்வம் எது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அவன்தான் சிம்மன்... நரசிம்மன்! மனித உருவமும் சிங்க முகமும் கொண்ட சிங்கமுகப் பெருமாள் நரசிம்மன்!

நரசிம்ம தெய்வத்திற்குப் பல கோவில்கள் உள்ளன. அவற்றுள் உக்கிர மூர்த்தியாக ஸ்ரீபக்த பிரகலாதனுக்குக் காட்சி அளித்த ஸ்தலம் சிங்கர்குடி என்று அழைக்கப்படும் தலமாகும்.

நாராயணனின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம்! "நாராயணன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்' என்று தந்தை ஹிரண்யனிடம் வாதிட்டவன் பிரகலாதன்! தீய இயல்பு கொண்ட ஹிரண் யனை ஆக்ரோஷமாகப் பிளந்து அவனை அழித்தவர் நரசிம்மர். அவர் அழித்தது ஹிரண்யனைத்தான் என்றாலும், அதன் பின்னணியை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

அதர்மம், அதர்த்தம், அசத்தியம், அமோட்சம் ஆகிய துர்க்குணங்களை அழிப்பதுதான் உக்கிர நரசிம்மரது ஹிரண்ய வதம் வெளிப்படுத்தும் தாத்பர்யம்.

அர்த்தம் என்பது வாழ்க்கையின் அர்த் தங்களைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் வேதங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுதல் ஆகும். மோட்சம் என்பது- தர்மத்தைப் போதிப்பது, பிறருக்கு உதவி செய்வது ஆகியவையாகும்.

சாஸ்திரங்களை மீறி- அவற்றை அலட்சியப்படுத்தி, அவரவர் மனம் போன போக்கில் தெய்வ வழிபாட்டில் ஈடுபடக்கூடாது. 

அதாவது ஒருவன், "நான் ஒரு வேலையும் செய்ய மாட்டேன். மூன்று வேளையும் மூக்கு முட்ட உணவு உட்கொள் வேன். வீட்டிலேயே உட்கார்ந்து ஸ்வாமி நாமங்களைக் கூறிக் கொண்டிருப்பேன். நான்தான் சிறந்த பக்தன்' என்று சொல்லிலி மோட்சத்தை எதிர்பார்த்தால் அது கிடைக் குமா? "நான் நாம சங்கீர்த்தனம் மட்டுமே செய்து வாழ்வேன். இறைவனை வழிபடுவேன்' என்று முடிவு எடுப்பவன், என்றோ ஒரு நாள் மட்டுமே உணவு உட்கொண்டு, மற்ற அனைத் தையும் விட்டு விட்டு... பற்றுதலை இற்றுப் போக வைத்துவிட்டு, நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டிருந்தால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும்.

நரசிம்மருக்கு பத்து ரூபாய்க்கு பூ அல்லது பழம் மட்டுமே வாங்கக் கூடிய பண வசதி உள்ளவன், கடன் வாங்கி இருநூறு ரூபாய் செலவு செய்து நரசிம்ம ருக்குக் கைங்கர்யம் செய்தால் அது அதர்மம். இருநூறு ரூபாய் செலவு செய்யக் கூடியவன், கடவுளுக்கு வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் இதுவும் அதர்மம்
 
அதர்மத்தை அழிக்கும் எண்ணத்தில்தான், நரசிம்மர் ஹிரண்யனை அழித்தார். ஹிரண்யனை அழிக்கும் உக்கிர மூர்த்தியாக நரசிம்மரைத் தரிசித்து வணங்குவதற்கு சிங்கர்குடி நரசிம்மர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.

சிங்கர்குடி நரசிம்மர் ஆலயத்தின் கோபுரம் பற்பல வண்ணச் சிற்பங்களைக் கொண்டதாக மிக அழகாக இருக்கின்றது. உள்ளே நுழைந்த தும், இடது பக்கம் கனக துர்க்கையின் சந்நிதி உள்ளது. வலது பக்கம் நாகர், குங்கும அபிஷேகம் செய்யப்பட்ட கோலத்தில் இருக் கிறார். இக்கோவில் பல்லவ அரசர்களால் கட்டப்பட்டது. பல்லவர்கள் அரசாண்டு வந்த காலத்தில் மன்னர்களும், போர் வீரர் களும் கனக துர்க்கையை வழிபட்ட பின்னரே, கோவிலுக்குச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

உக்கிர நரசிம்மரின் கருவறைக்குச் செல்லும்பொழுது, நாம் விநாயகர் என்று அழைக்கும் தும்பிக்கை ஆழ்வார், இங்கு வாசிஷ்ட விநாயகர் எனும் நாமம் கொண்டு தனிச் சந்நிதியில் காட்சி அளிக்கிறார்.

இவரை வணங்கிவிட்டு, கொடி மரத்தின்முன் நின்று வணங்கிய பிறகு, கருடாழ்வாரை வணங்கி, அதன்பின் உக்கிர நரசிம்மரைத் தரிசனம் செய்ய மனம் துடிக்கின்றது.

கோபம் பொங்கிய உக்கிரமான உருவில் காட்சி அளிக்கும் நரசிம்மரைப் பார்க்க, உடல் புல்லரிக்கின்றது. இவரது பதினாறு கைகளில் எட்டு கைகள் நமக்குப் பல பாதுகாப்புகளை வழங்கும் ஆயுதங்களான சங்கு, சக்கரம், குறுவாள், பதாகஹஸ்தம், சூலம், வில், கதை, கேடயம் ஆகிய ஆயுதங்களை ஏந்தியுள் ளன.

மற்ற எட்டு கைகளில் ஒரு கை ஹிரண்யனின் தலையை அழுந்தப் பிடித்துள்ளது. மற்ற கைகள் ஹிரண்யனின் குடலைக் கிழிப்பதும், அவனது தலையைக் கிள்ளி எறிவதுமான தீயவனை அழிக்கும் செயல்களைப் புரிகின் றன.

உக்கிர நரசிம்மரின் அந்தக் காட்சியைக் காணும்பொழுது நம் வாழ்வில் ஏற்படும் தீமைகள், துன்பங்கள், துயரங்கள் ஆகிய வற்றையும் அழித்து, நல்வாழ்வு அளிக்கும்படி நம் இதயத்தில் வேண்டுதல் தோன்றுகிறது.

நரசிம்மரைத் தரிசனம் செய்தபிறகு வெளிப்பிராகாரத்தில் அழகிய வண்ண வேலைப்பாடுகள் செய்த தூண்களால் தாங்கப்படும் மண்டபத்தில், தனிச் சந்நிதியில் கனகவல்லிலித் தாயார் மிகமிக அழகாக வீற்றுள்ளாள். "கனகவல்லிலித் தாயாரே... கனகத்தை அள்ளிக் கொடு தாயே... நோயற்ற வாழ்வு எனும் குறைவற்ற செல்வத்திற்கு ஈடான கனகத்தை அள்ளிக் கொடு தாயே' என்று மனம் வேண்டுகிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தாயாரை ஊஞ்சலிலில் அமர்த்தி விழாக்கோலம் நடக்கிறது. உக்கிர நரசிம்மப் பெருமாளின் உற்ற துணைவியான கனகவல்லிலித் தாயாரின் அழகிய வடிவம் கண்டு இவ்வுலகே மறக்கிறது.

தாயாருக்கு இடது பக்கம் உள்ள ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சனேயர் சந்நிதியில் "ஹரே ராம ஹரே ராம' எனும் நாம சங்கீர்த் தனம் ஒலிலித்தபடி உள்ளத்தில் ஒளியூட்டியது.

பிரதோஷத்தன்று நரசிம்மருக்கு விசேஷ பூஜையும் அபிஷேகமும் நடைபெறும். வெளிப்பிராகாரத்தில் கோதை நாச்சியார் எனும் நாமம் கொண்ட ஆண்டாள் வீற்றுள் ளாள். "ஆண்டாளம்மா! துன்பங்கள் இனி வேண்டாமம்மா' என்று வேண்டிக் கொள்ள மனம் விழைகிறது. மிகச் சிறந்த பிரார்த்தனை தலமான சிங்கர்குடி உக்கிர நரசிம்மர் சந்நிதியில் பிரார்த்தித்துக் கொண்டால், நமது வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும். மனிதப் பிறவிகளான நமது பிரார்த்தனைகள் மட்டுமல்லாமல், புராண காலத்து மகான் களான வசிஷ்டர், ஜமதக்னி முனிவர், பிருகு முனிவர், இந்திரன், சுக்கிரன், பிரகலாதன் ஆகியோரின் பிரார்த்தனைகளையும் ஈடேற்றி யிருக்கிறார் என்கிறது தல வரலாறு.

தீமைகளையும் தீயவர்களையும் அழிக்கும் நரசிம்மர், நல்லவர்களுக்கு நலம் அளித்து நன்மைகள் புரிகிறார். எனவே பிறருக்குத் தீங்கிழைக்காமல் வாழ வேண்டும். அகம் பாவம், ஆணவம், அநியாய நடவடிக்கைகள் ஆகியவை அழிவைத்தான் அளிக்கும் என்பதை புராண காலத்தில், ஹிரண்யனை வதம் செய்து பாடம் புகட்டினார் உக்கிர நரசிம்மர்.

அந்தக் கோலத்தை சிங்கர்குடியில், தன்னை நாடி வரும் அனைவருக்கும் காட்டி, நன்மைகள் மட்டுமே செய்யும்படி நமக்கு வலிலியுறுத்துகிறார் நரசிம்மர்.

இவரது சீற்றம் நம்மை சீர்படுத்தவே என்பதைப் புரிந்து கொண்டு, நரசிம்மர் பாதம் பணிந்து வேண்டுவன யாவும் பெற்று வாழ்வோம்.

சிங்கர்குடி நரசிம்மர் கோவில், கடலூர்- புதுச்சேரி பாதையில் தவளக்குப்பம் எனும் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலை வில் உள்ள சிங்கர்குடி எனும் இடத்தில் உள்ளது.
 

Friday 13 January 2012

28. The only virtue the girls possess for the claim is His birth among the cowherds.

வெள்ளி ஜனவரி 13, 2012

மார்கழி 28, கர வருடம்

திருப்பாவை :பாடல் - 28கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆ#க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள்: குறை இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்ப்பவர்கள். இணைந்து அமர்ந்து உண்பவர்கள். எங்களது அறிவு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுண்டம் உறுதிஎன்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம். உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றிஎல்லாம் எங்களுக்குத்தெரியாது. "கண்ணா! மணிவண்ணா! கருணாகரா!' என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைக்கிறோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.


விளக்கம்: விரதத்தில் பழுது ஏற்பட்டு விட்டால், மனம் வருத்தப்படுகிறது. ஆனால், விரதம் இருக்கும் முறை ஆயர்களுக்கு தெரியாது. ஆனால், ஒன்றே ஒன்று தெரியும். அது தான் "கண்ணா' என்ற திருநாமம். அதை நிஜமான பக்தியுடன் சொன்னார்கள். வைகுண்டத்தை அடைந்தார்கள். விரதத்தை விட பக்தியே முக்கியம் என்பதை ஆண்டாள், இப்பாடல் மூலம் தெளிவுபடுத்துகிறாள்.

Milk-cows we would follow, reach the wood and eat,
        Amongst tribe pastoral, sans any intellect, Thou'rt born
     This the only virtue we own; our acquaintance is a bond;
        The intimacy hither, could never be torn;
     Oh! Govinda! Deficient in nothing!
        We girls ignorant and forlorn
     Addressed Thee in unbecoming names;
        Let Thou not hiss! Lo! Master!
        Bless us, we in ardour
        Bestow on us our desire,
        Listen and consider, our damsel.

திருப்பள்ளியெழுச்சி :பாடல் - 8


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்மூவரும்
அறிகிலர் யாவர் மற்றறிவார்பந்தணை விரலியும்
 நீயும் நின்னடியார்பழங்குடில் தொறும் எழுந்தருளிய
 பரனே!செந்தழல் புரை திருமேனியும்
காட்டித்திருப்பெருந்துறையுறை கோயிலும்
காட்டிஅந்தணன் ஆவதும் காட்டி
வந்தாண்டாய்ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: என்னை ஆட்கொண்டவனே! அமுதமான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்தவன், எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? நீ நெருப்பாக நின்று உன் வடிவத்தைக் காட்டினாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணர் வேடத்தில் வந்து ஆட்கொண்டாய். சிறப்புகளை உடையவனே! துயில் எழுவாயாக.

விளக்கம்: சிவனை விட உயர்ந்த தெய்வம் வேறில்லை என்று இப்பாடல் மூலம் சொல்கிறார் மாணிக்கவாசகர். இறைவனுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லை என்பதால், அவன் பழைய குடிசைகளுக்குக்கூட வருவான் என்ற அடிப்படையில் "பழங்குடில்' என்ற வார்த்தையைக் கையாண்டிருக்கிறார்.

Thursday 12 January 2012

852th week parayanam 14-01-2012

ஓம் நமோ நாராயண  ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண 

 852nd   weekly parayanam  (இந்த வார  பாராயணம்)

தமிழ் மாதம்  தை  ஒன்று  கர வரடம்

Sh. Kashi Vishwanathan 
B-12 / 48C DHAWAL GIRI,
SECTOR-34 NOIDA - 201 307 UTTAR PRADESH

TIME: 7.00 P.M.                   DAY:  SATURDAY

ஓம் நமோ நாராயண  ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண 

27. Some more prize objects are claimed for their own count.

வியாழன் ஜனவரி,12, 2012

மார்கழி 27, கர வருடம்

திருப்பாவை - பாடல் - 27

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

விளக்கம்: கூடாரை வெல்லும் சீர்கோவிந்தன் என்று ஆண்டாள் கண்ணனை போற்றுகிறாள். பகைவர்களை வெல்லும் பெருமை மிக்கவன் அவன். கோயில்களில் இன்று கூடாரவல்லி விழா நடைபெறும். அக்கார அடிசில் என்னும் உணவு படைப்பர். நெய்யில் தயாரிக்கப்படும் இது இனிய சுவை கொண்டது. கிருஷ்ண தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் பெண்கள் பாடும் பாடலாகும்.

The unconjunctive Thou conquer, Oh!
Govinda glorious ! Praying Thee we acquire our desire;
Shall we spell out the prize we aspire?
Fabulous gift praiseworthy by the country;
Bracelet, shoulder-ring, ear-stud, floral, anklet,
And several such we enjewel our body entire,
Would enrobe and follow through
Cooked milk-rice delicious,
Steeped in ghee poured off copious
Which flow down the elbow, Thou amorous!
Entranced would remain conjunct, consider our damsel.

திருப்பள்ளியெழுச்சி - பாடல் - 7


அது பழச்சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோச
மங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


பொருள்: தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது. பால் போல் சுவையாக இருக்கிறது. உன்னை எளிதாக அடைந்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது. ""உன்னுடைய வடிவம் என்ன? இவன் தான் அவனோ?' என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, ""இதோ, என் உண்மையான வடிவம் இதுவே' எனச் சொல்லி, எங்கள் முன்னால் இருக்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே கேட்கிறோம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக.
விளக்கம்: "எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்' என்ற பாடல் வரி மாணிக்கவாசகரின் உள்ளத்தை நமக்கு வெளிப்படுத்து கிறது. " இறைவா! நீ என்ன நினைக்கிறோயோ அதைச் செய்வாயாக!' என்று சிவனைக் கேட்கிறார். பக்தி முதிர்ந்த நிலையில் இருக்கும் பக்தனின் நிலை இது தான். நாமும் அந்நிலை பெற எண்ணி இப்பாடலைப் பாடுவோம்.

HAPPY PONGAL

Wednesday 11 January 2012

26. The objects for the ritual are solicited.

புதன் ஜனவரி 11, 2012

மார்கழி 26, கர வருடம்

திருப்பாவை- பாடல் - 26

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையன
வேசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலரத்தினம் போன்றவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற்கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும் கொண்ட உன் சங்காகிய பாஞ்சஜன்யம்போன்ற வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

விளக்கம்: ரத்தினக்கல்லை விரும்புபவன் சாதாரண கல்லை ஒருபோதும் விரும்ப மாட்டான். அதுபோல, கண்ணனை நாடுபவர்களுக்கு வேறு எதுவும் தேவைப்படாது. பெரியவர்கள் வகுத்த நியதியை நாம் பின்பற்றவேண்டும் என்பதையும் இப்பாடலில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.

Oh! Amorous! Emerald-hued!
If thou wouldst lend an ear
To our requisites for Margali bath a la elders observed;
Thou shalt grant us huge conches, milky white
When trumpet'd shall bring
The entire earth to shudder severe, Much alike
Thy Panchajanya, grand vast drum, the choir,
Ornamental lamp, canopy, and flag to hoist;
Lavish out gift galore to gloat,
Thou reposed in banyan leaf afloat
Be benevolent, listen and consider, our damsel

திருப்பள்ளியெழுச்சி - பாடல் - 6

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: பார்வதிதேவியின் துணைவனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவபெருமானே! எம்பெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் அடியவர்கள், குடும்பம், பந்தபாசங்களை உதறிவிட்டு உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர். கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி நிலை தர உடனே விழித்தருள வேண்டும்.

விளக்கம்: பாசபந்தம் இருக்கும் வரை உயிர்களை பிறவிப்பிணி தொடரும். அற்றது பற்றெனில் உற்றது வீடு என்பர். அதனால், சிவசிந்தனையில்மனம் ஈடுபட்டவர்க்கு பாசபந்தம் அகன்றுவிடும் என்பதை மாணிக்கவாசகர் இப்பாடலில் தெரிவிக்கிறார்.

Tuesday 10 January 2012

25. The girls crave to do service and implore to get rid of their grief.

செவ்வாய், ஜனவரி 10, 2012

மார்கழி 25, கர வருடம்


திருப்பாவை-பாடல் - 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: தேவகியின் மைந்தனாக பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் மறைந்து வளர்வதற்காகச் சென்றவனே! உன் பிறப்பை அறிந்த கம்சன், உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அவனது எண்ணத்தை குலைக்கும் வகையில், அவனது வயிற்றில் பயம் என்னும் நெருப்பை விளைவித்த திருமாலே! உன் அருள் வேண்டி வந்திருக்கிறோம். அதைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

விளக்கம்: பயத்தை அறவே விட்டொழிக்க வேண்டும், அது நெருப்பு போல் வயிற்றைக் கவ்வும். பல நோய்களுக்கு காரணம் பயமே. பயம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், அன்பு வழியை நாட வேண்டும். கம்சன் அன்பை மறந்து இறைவனையே பகைவனாகக் கருதியதால் அழிந்தான்.


Born a son to some woman and the same night
Brought up a son concealed by some other
Thou had foiled the intent of Kanchan,
The intolerant harbouring animosity; and had
Stood upon his stomach a fire, inspir'd terror.
Oh! Hillock Tall, Divinity!
We have come unto Thee beseeching;
To solicit wealth which patroness would covet;
If Thou wouldst grant us the desire
We would sing Thy bravery, ridding grief entire
And be delight'd, listen and consider our damsel



திருப்பள்ளியெழுச்சி - பாடல் - 5

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எம்மை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! பஞ்சபூதங்களிலும் நீ இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. புலவர்கள் உன்னுடைய சிறப்புஇயல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள், பக்தர்கள் உன்பெருமைகளைச் சொல்லி ஆடுகிறார்கள். இப்படி பாடியாடுபவர்களும் உன்னைப் பார்த்ததில்லை. உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை.

அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட்கொள்ள வேண்டும். அதற்காக, உடனே துயில் நீங்கி எழுவாயாக.விளக்கம்: இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான். எனவே தான் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களையும் இறைவனாகப் பார்க்க வேண்டும். இயற்கைக்கு தரும் மரியாதை இறைவனுக்கு தரும் மரியாதையாகும்.

Monday 9 January 2012

24. His feet, energy, glory, generosity, nobility, bravery and spike are hailed.

திங்கள் ஜனவரி 9, 2012
மார்கழி 24, கர வருடம்
திருப்பாவை - பாடல் - 24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.


பொருள்: மூன்றடிகளால் உலகளந்த உன் திருவடிகளுக்கு வணக்கம். தென்னிலங்கை ராவணனை வெற்றி கொள்ள ராமனாய் வந்த உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே உதையில் வீழ்த்திய உன் புகழுக்கு
வந்தனம். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை விளாமர வடிவில் வந்த கபித்தாசூரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு வணக்கம். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை காத்த உன் இரக்க குணத்துக்கு வந்தனம். பகைவர்களை அழித்த உன் வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு நாங்கள் வந்து
உள்ளோம். எங்கள் மீது இரக்கம் கொண்டு அருள்செய்.


விளக்கம்: பள்ளிக்குப் புறப்படும் முன், இந்த பாசுரத்தை குழந்தைகள் தினமும் பாராயணம் செய்தால் படிப்பில் திறமை, நடைமுறை வாழ்விலுள்ள சிக்கல்களை எதிர்க்கும் தைரியம் ஏற்படும்.

All-hail, Thy foot meted this earth thence;
All-hail, Thy energy went thither, conquered Lanka South;
All-hail, Thy glory kick'd the wheel to ruins;
All-hail, Thy foot the calf, as a throw-stick toss'd;
All-hail, Thy generosity held the hillock an umbrella;
All-hail, Thy spike won and shatter'd hostile uncouth
And so on singing Thy bravery,
Revering Thy laurel factual,
To obtain the desire auspicious
Have come this day, we ambitious
Yield! listen and consider our damsel.

திருப்பள்ளியெழுச்சி-பாடல் - 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆட்கொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.



பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலையில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை மீட்டியபடி ஒருபுறம் உன் பக்தியில் லயித்து நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங்களால் உன்னை வணங்குவோரும், தமிழ்
தோத்திரப்பாடல்களைப் பாடுவோர் மறுபுறமும் உன் சிறப்பைப் பாடிக்
கொண்டிருக்கிறார்கள்.



"நமசிவாய' என்ற நாமம் சொல்லியபடி மலர்மாலைகளுடன் பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் மல்க பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்பவர்களும் ஒருபுறம் நிற்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். எனது இறைவனே! இவர்களது பக்தியின் முன் எனது பக்தி மிகச்சாதாரணம். அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொண்டவனே! பள்ளியில் இருந்து நீ எழுந்தருள வேண்டும்.



விளக்கம்: இறைவழிபாட்டில் இறங்கி விட்டால், அதைத் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது என்பதை இந்தப் பாடலின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

Sunday 8 January 2012

23. Krishna is requested to sit down on a throne and inquire about their grievances.

திருப்பாவை- பாடல் - 23


மாரி மலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திலிருந்து, யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


பொருள்: மழைக்காலத்தில் மலையில் உள்ள குகையில் உறங்கும் வீரம் மிக்க சிங்கம், கண்களில் நெருப்புப்பொறி பறக்க, நாற்புறமும் நடமாடி, பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புவது போல, காயாம்பூ நிறத்தைஉடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு வெளியே வருவாயாக. மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கு வந்தோம் என்பதைக் கேட்டு, கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

விளக்கம்: இறைவனிடம் கோரிக்கை வைப்பது நமது உரிமை. அந்த கோரிக்கை நியாயமானதாக நம் மனதுக்குப் படலாம். ஆனால், இறைவன் அதை வேண்டாம் என நினைத்து விட்டால் நமக்கு கிடைப்பதில்லை. எனவே, அவனிடம், ""நீ என்ன தர விரும்புகிறாயோ, அதைக் கொடு,'' என பிரார்த்திக்க வேண்டும். அதை அவன் ஆராய்ந்து அருளுவான்.

As would a fierce lion in a mountain den Stay along in winter, lie asleep gang with, Enlighten'd, open eye, emit fire, mane erect Stretch in all direction; Oh! Bilberry-hued; Thou shalt roar! Start with a bang, This ward move from Thy temple forthwith, Settle on carved out throne exquisite, We have come unto Thee to woo; Ponder over our requisite; Bestow grace, the desire implicit Listen and consider, our damsel.

திருப்பள்ளியெழுச்சி-பாடல் - 3

கூவின பூங்குயில், கூவின கோழி
குருகுகள் இயம்பின, இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணைக்காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்! எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! சூர்யோதத்தை அறிவிக்கும் வகையில் குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகள் கீரிச்சிடுகின்றன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல, நானும் மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை நிரப்பி வந்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக.

விளக்கம்: சூரியன் உதித்து விட்டால், நட்சத்திர ஒளி அதனுடன் ஒன்றிப்போய் விடுகிறது. அதுபோல், நம் மனம் இறைவனுடன் ஒன்றிப் போய் விட வேண்டும். இதுவே நிஜமான பக்தி என்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது.

Saturday 7 January 2012

22. The girls have approached as Kings, shedding their ego and to do menial Service.

சனி ,ஜனவரி,7, 2012

மார்கழி ,22, கர வருடம்


திருப்பாவை : பாடல் - 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப்பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல்
நோக்குதியேல்எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: ""எங்களை விட சிறந்த வீரர்கள் யாருமில்லை,'' என தங்களைப் பற்றியே பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் நீ பள்ளி கொண்டு உள்ள கட்டிலைச் சுற்றிலும் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் தரிசனத்துக்காக காத்திருக்கிறோம். சிறிய மணியின் வாய்போலவும், தாமரைப்பூ மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடும்.விளக்கம்: குசேலன் வந்தார் கண்ணனைக் காண! அவனது கடைக்கண் பார்வைக்காக ஏங்கினார். கண்ணனோ, அந்த பக்தனை ஆரத்தழுவி, அருகில் அமர்த்தி உணவூட்ட ஆரம்பித்து விட்டான். கிழிசல் துண்டில் முடிந்து வந்த அவலை சாப்பிட்டு, குசேலனைக் குபேரனாக்கி விட்டான். கடவுளின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். நம் வாழ்வு மலர்ந்து விடும்.

Beneath Thy bedside have we gather'd
As kings on this large handsome earth
Would crowd around, sans ego;
Wouldst Thou glance at us, with Thy
Eye, a la ankle trinket, lotus blooming,
Sun and moon awake at a time in mirth!
If Thou glimpse with eyes two beautiful,
By little and little on us tarnish'd
Sin and curse shall vanish
From we the girls vanquish'd;
Listen and consider, our damsel.


திருப்பள்ளியெழுச்சி : பாடல் - 22


அருணன் இந்திரன் திசை அணுகினன்
இருள்போய்அகன்றது உதயம் நின்மலர்த்திரு
முகத்தின்கருணையின் சூரியன் எழுவெழ
நயனக்கடிமலர் மலரமற்று அண்ணல்
அங்கண்ணாம்திரள்நிறை யறுபதம்
முரல்வன இவையோர்திருப்பெருந்
துறையுறை சிவபெருமானேஅருள்நிதி
தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: திருப்பெருந்துறை சிவபெருமானே! சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கே வந்து விட்டான். உன் முகத்தில் பொங்கும் கருணை ஒளியைப் போல சூரியனும் எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உன் கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட்டன. வண்டுகள் அவற்றில் தேன் குடிக்க வருகின்றன. இந்த இனிய காலைப்பொழுதில், அருட்செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே! மலை போல் இன்பம் தருபவனே! அருட்கடலே! நீ கண் விழிப்பாயாக. விளக்கம்: தாமரை சிவன், வண்டுகள் பக்தர்கள். தாமரை மலர்ந்ததும் வண்டுகள் தேன் குடிக்க வருவது போல், பக்தர்களாகிய வண்டுகள், அவன் திருவடியைத் தேடி வருகிறார்கள் என்கிறார் மாணிக்கவாசகர்.

Friday 6 January 2012

851th week parayanam 07th-01-2012

ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

இந்த வாரம் சஹஸ்ரநாம  பாராயணம் ஸ்ரீ சுரேஷ்  அவாரகள் அகத்தில் நடை பெரும்

THIS WEEK WEEKLY PARAYANAM 851th WEEK 07TH JANUARY 2012

Sh  Suresh,
B-1/253 ARAVALI APARTMENT
SECTOR-34 NOIDA
 TIME 7.30 P.M.
ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

21. The girls have come Lost to His qualities-beauty, compassion and love.

வெள்ளி ஜனவரி,6, 2012
மார்கழி 21, கர வருடம்

திருப்பாவை பாடல் - 21


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனான கண்ணனே! எழுவாயாக. வேதங்களால் போற்றப்படுபவனே! பலசாலியே! வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! எழுவாயாக! உன்னை எதிர்த்த அரசர்கள் வலிமையிழந்து, உன் வீட்டு வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியை வணங்குவதற்கு காத்திருக்கிறோம்.


விளக்கம்: கண்ணனுக்கு பயந்த மன்னர்கள், பயத்தால் அவனை வணங்கக்காத்திருந்தார்கள். இவ்வாறு இறைவனை வணங்குவதில் பயனில்லை. ஆனால், அவனது திருவடியே தஞ்சமென்று, ஆயர்குலப் பெண்கள் வந்தார்கள். இந்த ஆத்மார்த்த பக்தியையே இறைவன் விரும்புகிறான்.

In vessels receptile filled to brim,grand donor cows
Issue incessant flow of milk to counter flow;
Oh! Son of Nandagopala! Owner of such immense;
Get enlighten'd! Thou resolute, magnanimous,
Remain pre-eminent on this earth,
A beacon resplend aglow;
We have come lauding and hailing;
Forlorn, sans energy, and assiduous;
As would foes, at Thy gate unanimous,
Have gather'd to surrender to Thy foot glorious;
Arise! Listen and consider, our damsel.


திருப்பள்ளியெழுச்சி




புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு

ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

போற்றி ! என் வாழ்விற்கு முதலாக அமைந்த பொருளே !
பொழுது புலர்ந்தது. உம்முடைய பூப்போன்ற கழலடிக்கு அதுபோன்ற
மலைகளைக் கொண்டு வழிபட்டு, உம்முடைய திருமுகத்தில்
எங்களுக்கு அருள் செய்யும்பொருட்டு மலர்கின்ற அழகிய புன்னகையைக்
கண்டு, அதனால் (உறுதி பெற்று) உம் திருவடிகளைத் தொழுகின்றோம்.
தேன் தவழும் இதழ்களைக் கொண்ட தாமரைகள் மலர்கின்ற குளுமையான
வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே !
காளை பொறித்த உயர்ந்த கொடியை உடையவனே ! என்னை உடையவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

Meaning:Praises, Oh The Thing that is the principal for my life ! It is dawn, hailing the floral feet with alike flowers, with the glorious smile in Your Rich Face blooming grace to us, (we) worship Your Rich foot. Oh Lord shiva residing at thirupperun^thuRai encircled by the lotuses of muddy petals blooming chill fields ! Oh, Owner of the Bull raised flag ! Oh, my Master !! my Lord ! Bless getting up !!

Thursday 5 January 2012

20. Once again, the Divine Couple are aroused.

20. Once again, the Divine Couple are aroused.

வியாழன் டிசம்பர், 05, 2012
மார்கழி 20, கர வருடம்  



This Paasuram also explores about Sri Andal waking up a Paavai who is still sleeping.
"Hey cousin! As a result of this Noanbhu, we will get the final destiny - the Swargham (heaven). But, you are still sleeping. You are not coming out, but at least you can open your mouth and say something, but instead you are keeping up the silence. Thulasi (Thiruthuzhai) garland, which is found on the ThiruMaarbhu of Sri Krishnar is waiting for us to give the varam what we what. During the Sri Ramavathar, He conquered Kumbakarnan. He was famous for his sleep. Likewise, you are replicating him and did he give his great sleep to you? You are a great Paavai for us. So, don't sleep. Get us and join with us." Words and the meanings:Notruccheevarkkam Pugugindra Ammanaai :
'Chuvarkkam' means Heaven. If we perform this Paavai Noanbhu, going to Swargham (heaven) is assured. Naatrakkuzhai Mudi Narayanan :
This refers to the Thulasi being found along with the ThiruMaarbhu of Sriman Narayanan and it is said to have fragrance in nature.

திருவெம்பாவை  20 போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் 
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் 
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் 
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் 
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் 
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் 
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் 
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20

போற்றி ! உன் தொடக்கமான மலர் போன்ற பாதம் அருளட்டும் !
போற்றி ! உன் முடிவான செம்மலர் போன்ற திருவடிகள் அருளட்டும் !
(இறைவனுக்கு ஆதியும் அந்தமும் இல்லாததால் அவன் பாதமே எல்லாம்).
போற்றி - எல்லா உயிர்களுக்கும் தோற்றம் ஆன பொற்பாதத்திற்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் இன்பமாகும் பூப்போன்ற கழல்களுக்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் முடிவாகும் இணையான இரு பாதங்களுக்கு !
போற்றி - திருமாலும், நான்முகனும் காணாத திருவடித் தாமரைக்கு !
போற்றி - நாம் உய்வுறுமாறு ஆட்கொண்டருளும் பொன்மலரான திருவடிகளுக்கு !
போற்றி ! போற்றி ! மார்கழி நீராடுவோம் !

ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை.
Meaning:
Praises, bless (us) Your flower of feet, the beginning ! 
Praises, bless Your red tendershoots, the end ! 
Praises to the Golden feet, the origin of all lives ! 
Praises to the Floral ornated feet, the pleasure of all lives ! 
Praises to the Parallel feet, the termination of all lives ! 
Praises to the Lotus not seen by vishNu and the four faced ! 
praises to the Golden flowers that bless us taking as slaves ! 
Praises ! Bathing in the mArkazi month ! 



Wednesday 4 January 2012

ஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?

ஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?


வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.
ஏகாதசியன்று செய்யக்கூடாதது: ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
ஏழு பிரகாரம்: இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா <உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.
துவாதசிக்கு அகத்திக்கீரை: வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

ஏகாதசி விரத முறை: கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.

மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.
சொர்க்கவாசல்: வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.

திருச்சி-பெயர்க்காரணம்: ஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். 108 திவ்யதேசங்களில் ஒன்று. கோயில், திருமலை, பெருமாள்கோயில் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. இதில் கோயில் என்பது ஸ்ரீரங்கத்தையும், திருமலை என்பது திருப்பதியையும், பெருமாள்கோயில் என்பது காஞ்சிபுரத்தையும் குறிக்கும். அக்காலத்தில் திருச்சிஸ்ரீரங்கநாதன்பள்ளி என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால் இந்தப்பெயர் உண்டானது. இதில் ஸ்ரீ என்னும் எழுத்தை தமிழில் திரு ஆக்கிதிருச்சீரங்கநாதன்பள்ளி என்று அழைத்தனர். பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி என்றாகி, திருச்சியாக சுருங்கி விட்டது.
சூரியவம்ச குலதெய்வம்: பிரம்மா சத்தியலோகத்தில் ரங்கநாதப்பெருமாளை வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவக்கனல் சத்திய லோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய பிரம்மா, வேண்டும் வரம் தருவதாக அருள்புரிந்தார். பிரம்மதேவா! உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும்! என்று வேண்டினான். பிரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்தப்பெருமாளை அவனிடம் கொடுத்தார். இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான். அவரது காலத்தில், அவர் விபீஷணரிடம் தனது பட்டாபிஷேக பரிசாக அந்தச் சிலையைக் கொடுத்தார். அதை விபீஷணர் இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, காவிரிக்கரையில் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். திரும்ப வந்து எடுத்தபோது சிலையைத் தூக்க முடியவில்லை. அந்த இடமே ஸ்ரீரங்கம் ஆனது. பிற்காலத்தில், அவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை: விபீஷணர் ராமபிரானின் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், சூரியவம்சத்து குலதெய்வமான ரங்கநாதப்பெருமாளை பரிசாகப் பெற்றார். பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் பெருமாளைத் தாங்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து வந்தார். காவிரிநதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு உடல்சோர்வை ஏற்படுத்தினார். அரங்கம் என்னும் அம்மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் அவ்விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்கமுடியவில்லை. தகவல் அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் என்னும் மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கே, ஒரு மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், மன்னா! பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது பெருமாளே தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார்.

பாசுரங்கள் கிடைக்க உதவிய பாசுரம்: ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதானஆராவமுதே என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு மெய் மறந்தார். அதில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்னும் அடி வந்தது. அவர்களிடம் அன்பர்களே! நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்துபாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே? என்று கேட்டார். ஆனால், அவர்களுக்கு இதற்கான பதில் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார்திருநகரி சென்று இந்த கேள்வியை மதுரகவியாழ்வாரின் வம்சாவழியினரிடம் கேட்டார். அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், என்றனர். நாதமுனிகளும் 12ஆயிரம் முறை மதுரகவி யாழ்வாரின் பாசுரத்தைப் படித்தார். ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார். அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடும்படிச் செய்தார். இவ்வாறு நமக்கு 4000 பாசுரங்கள் கிடைத்தன.
அரையர் சேவை: வைகுண்டத்தைதிருநாடு என்று தமிழில்குறிப்பிடுவர். அத்திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் என்னும் எவ்வித உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பர். பரசவநிலையில் பெருமாளை புகழ்ந்து ஆடிப்பாடுவர். இக்காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் நாதமுனிகளின் உள்ளத்தில் எழுந்தது. அரையர் என்னும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.


பட்டாடை உடுத்தும் தினம்: அரையர் சேவைக்கென்று தனி உடை, பிற அலங்காரம் எதுவும் செய்து கொள்வதில்லை. கூம்பு வடிவ குல்லா ஒன்றை தலையில் அணிந்து கொண்டு பெருமாளுக்கு சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் ஆகியவற்றை மட்டும் அணிந்து கொண்டு அபிநயம் செய்வர். நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளே இச்சேவையை தொடங்கினார். பாசுரங்களை பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவம் காட்டி அரையர் நடிப்பர். அரையர் சேவையில் முத்துக்குறி என்னும் பகுதி உண்டு. குறிசொல்லும் ஒரு பெண்ணிடம், தாய் தன் மகளின் எதிர்காலம் குறித்து கேட்பதே முத்துக்குறி. முத்துக்குறியைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு. அன்று அரையர் ஒருவர் பட்டு உடுத்தி, தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவது சிறப்பு.

வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படிதான்!

வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படிதான்!
 
நார, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, அயனம்-இடம் உயிரிங்களுக்கு இடமானவன் நாராயணன். உயிரினங்களைக் காப்பதற்கு இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில காலங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவை புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது; ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரணன். முரன் கிளர்ந்தெழுந்தான், அமரர் சிதறினர், இறைவனும்  ஆற்றலிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான். முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம் இறைவன் திருமேனியினின்று கன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட முரனுக்கு முன்னின்றாள். முரன் முடிந்தான். கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பட்ட சக்தி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது. என் பகவானை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான் அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள். பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆகவேண்டும் , திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதசி தோன்றியது, மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் ! ஆகையால், மார்கழி மாதத்து கிருஷ்ணபட்ச ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்று வழங்கப்பட்டது. மார்கழி மாதத்து சுக்லபட்ச ஏகாதசி மோட்ச ஏகாதசி என்று வழங்கப் பெறும். இதுவே விமோசனம் தரவல்லது இந்த ஏகாதசி விரதத்தைக் கைக்கொண்ட அளவிலே ஒருவன் இன்னல்களிலிருந்து விடுதலை பெறுவதோடு தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் பெறுகிறான் என்கிறது சாஸ்திரம்.

ஏகாதசி விரதம் யார் இருக்க வேண்டும்?
 
ஏகாதசிக்கு விரதத்திற்கு வயது வரம்பு ஏகாதசி விரதத்திற்கு எல்லாரும் இருக்கவேண்டிய விரதம் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. எட்டு முதல் எண்பது வயதுக்குள் உள்ளவர்களே மேற்கொள்ள வேண்டும். இதனை, அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:! ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்னும் ஸ்லோகம் குறிப்பிடுகிறது.
ஏகாதசி வளர்ந்த கதை: மார்கழி வளர்பிறை ஏகாதசியிலிருந்து பத்து நாட்கள் வேதங்களை ஜெபித்து, ஸ்ரீரங்கத்திலுள்ள நம்பெருமாளை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், வேதத்தோடு நம்மாழ்வாரின் பாசுரங்களையும் பாடும் நடைமுறையை திருமங்கையாழ்வார் ஏற்படுத்தினார். நாதமுனிகள், மற்ற ஆழ்வார்களின் பாடல்களையும் சேர்த்துப் பாடும் வழக்கத்தை உண்டாக்கினார். அதற்காக, ஏகாதசிக்கு 10நாட்களுக்கு முன்பே இவ்விழா தொடங்கப்பட்டது. பாட்டு பாடுவதோடு, அபிநயமாக நடித்துக் காட்டி வியாக்யானம் (பாடலுக்கான விளக்கம்) சொல்லும் முறையை பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் ஏற்படுத்தினார். ஆடியபடியே பாடுவதற்கு அரையர் சேவை என்று பெயர். இந்த நடைமுறையே ஸ்ரீரங்கத்தில் பின்பற்றப்படுகிறது.
நிர்ஜலா ஏகாதசி: வியாசர் தர்மரிடம் ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். அங்கிருந்த பீமன், தானும் விரதமிருக்க ஆவல் கொண்டான். ஆனால், அவனால் பசி தாங்க முடியாது. அதிகமாக சாப்பிடுவது அவனது வழக்கம். வியாசரிடம், ஆண்டுக்கு ஒருமுறையாவது ஏகாதசி விரதமிருக்க வழிகாட்டும்படி வேண்டினான். ஆனி வளர்பிறை ஏகாதசியில் நீர் அருந்தாமல் விரதமிருந்தால், சகல ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் கிடைக்கும், என்றார் அவர். பீமனும் விரதமிருந்து பலனும் பெற்றான். ஆனியில் வரும் ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி, பீம ஏகாதசி என்பர்.
ரங்கநாதர் ஸ்தோத்திரம்: வைகுண்ட ஏகாதசியான இன்று ஸ்ரீரங்கநாதரை வணங்குவதற்குரிய ஸ்தோத்திரத்தைப் படியுங்கள்.
* காவிரியின் நடுவில் ஏழு திருமதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கநாதனே! தாமரை மொட்டு போன்ற விமானத்தில் குடிகொண்டவனே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் துயில்பவனே! யோகநித்திரையில் அனைத்தையும் அறிந்தும் அறியாதது போல இருப்பவனே! இடது கையை இடுப்பில் வைத்திருப்பவனே! ஸ்ரீதேவியும் பூதேவியும் வருடுகின்ற திருப்பாதங்களைக் கொண்டவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைப் போற்றுகிறேன்.
* கஸ்தூரி திலகமிட்ட நெற்றி கொண்டவனே! காது வரை நீண்டிருக்கும் அகன்ற கண்களைப் பெற்றவனே! முத்துக்கள் இழைத்த கிரீடம் அணிந்தவனே! பக்தர்களின் மனதை அபகரிக்கும் தேக காந்தி கொண்டவனே! தாமரைமலருக்கு ஈடான அழகுமிக்கவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைக் காணும் பாக்கியம் எப்போது எனக்கு கிடைக்கும்!
* மது என்னும் அரக்கனைக் கொன்றவனே! நாராயண மூர்த்தியே! முரனை வென்ற முராரியே! கோவிந்தராஜனே! உன் திருநாமங்களை உரக்கச் சொல்லி வாழ்நாளை எல்லாம் ஒரு நிமிஷம்போல கழிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா? காவிரிக்ரையோரம் வாழ்பவனே! இந்திர நீலமணி போன்ற பேரழகுடன் ஆதிசேஷ சயனத்தில் படுத்திருப்பவனே! உன் அருகில் வாழும் பாக்கியத்தை தந்தருள வேண்டும்.
* பெருமானே! புனிதமான காவிரியில் நீராடும் பாக்கியம் எனக்கு வேண்டும். அடர்ந்த பசுமரங்கள் நிறைந்த அழகுமிக்க காவிரி நதிதீரத்தில் நான் வசிக்கும் பேறு பெற வேண்டும். மங்கலம் நிறைந்தவனே! தாமரை மலர் போன்ற கண்களைப் பெற்றவனே! உன்னை பக்தியோடு வணங்கும் பாக்கியத்தை அருள்புரிவாயாக.
* ரங்கநாதனே! பாக்கு மரங்கள் நிறைந்ததும், தெளிந்த நீரால் நிரம்பியதும், வேதகோஷத்தால் சூழப்பட்டதும், கிளி, குருவி போன்ற பறவைகள் ஒலியெழுப்புவதும், தரிசித்தவர்க்கு வைகுண்டம் தந்தருளி மோட்சத்தைக் காட்டுவதுமான லட்சுமிகடாட்சம் நிறைந்த ஸ்ரீரங்கத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ?
* எம்பெருமானே! தேவேலோக நந்தவனத்தில் அமிர்தம் அருந்தும் பாக்கியம் எனக்கு வேண்டாம். தேவர்களில் ஒருவராகவும் நான் மாற வேண்டாம். ஸ்ரீரங்கத்தில் ஒரு நாயாக வாழும் பாக்கியத்தைக் கொடுத்தால் போதும்.
* அம்மா! எனக்கு மிகவும் பசிக்கிறது. உடல் நடுங்குகிறது, என்று சொல்லும் குழந்தையிடம் தாய் எப்படி பாசத்தோடு ஓடி வந்து அணைத்து ஆகாரம் தருவாளோ அதுபோல...ரங்கநாதா! என் துயரத்தைப் போக்க வந்தருள்வாயாக.

வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?

வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?

மார்கழி வளர்பிறை ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. திதிகளில் ஏகாதசி 11வது நாள். ஏகாதசிக்கு முதல்திதியான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். தசமியன்று ஒருவேளை உணவும், மறுநாளான ஏகாதசியன்று பட்டினியும் இருக்க வேண்டும். துளசி நீர் குடிக்கலாம். உடல்நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். ஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின் திருநாமங்களை சொல்ல வேண்டும். விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். அதன் பிறகு சாப்பிட வேண்டும். இதனை பாரணை என்பர். பாரணையில் 21 விதமான காய்கறிகள் இடம் பெற்றிருக்கும். இயலாதவர்கள் அவரவர் வசதிக்கேற்ப சமைத்துக் கொள்ளலாம். அகத்திக்கீரை, நெல்லிக்காய் அவசியம் சேர்க்க வேண்டும். பாரணைக்குப்பின் உறங்கக் கூடாது. ஏகாதசியன்று துளசி இலை பறிக்கக் கூடாது. முதல்நாள் பறித்த இலைகளை பூஜைக்கும், தீர்த்தத்திற்கும் பயன்படுத்தலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருப்பதால் மார்கழி ஏகாதசியை வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்பர். கோயில்களில் பெருமாள் இந்நாளில் பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். இதன் வழியாக கோயிலுக்குள் சென்று பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு. ஏகாதசிக்கு பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானது. இவ்விரதத்தால் செல்வவளமும், புண்ணிய பலனும் கிடைக்கும்.

ஏகாதசி விரதம் ஏன்?

பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, விஷ்ணுவின் உடலில் இருந்த மாயாசக்தி, ஒரு பெண்ணின் வடிவெடுத்து, அவர்களை அழிக்க புறப்பட்டது. வெற்றியுடன் வைகுண்டம் திரும்பிய அந்த சக்தியைப் போற்றிய நாளே வைகுண்ட ஏகாதசி. அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் ஏற்பட்டதாக பத்மபுராணம் கூறுகிறது. பாற்கடலில் பெற்ற அமிர்தத்தை மோகினி வடிவெடுத்த விஷ்ணு, தேவர்களுக்கு வழங்கிய நாளே வைகுண்ட ஏகாதசி என்றும் சொல்வர். உபநிடதங்களின் சாரமாக விளங்குவது பகவத்கீதை. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்த நாள் ஏகாதசியன்று தான். அதனால், இந்த திதிக்கு கீதா ஜெயந்தி என்றும் பெயருண்டு.
ஏகாதசியன்று இரட்டை சாப்பாடு
ஏகாதசி குறித்து, ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம்!சுத்தோபவா: ப்ரதம: ஸத்கதா த்ரவணம் தத:!! என்ற ஸ்லோகம் இருக்கிறது.
இதில் வரும் போஜந த்வயம் என்ற வார்த்தைக்கு ஏகாதசிநாளில் இருமுறை சாப்பிடுங்கள் என்று அர்த்தம். ஏகாதசியன்று பட்டினியல்லவா இருக்க வேண்டும். இதென்ன என யோசிக்கிறீர்களா? போஜன என்பதை போ ஜன என்று பிரித்து பொருள் சொல்ல வேண்டும். ஹே! ஜனங்களே! என்பது இதன் பொருள். ஹே! ஜனங்களே! ஏகாதசியில் எல்லோரும் செய்ய வேண்டியது இரண்டு. உபவாசமாக பட்டினியிருப்பதும், இறைவனின் பெருமைகளைக் கேட்பதுமாகும் என்பது ஸ்லோகத்தின் பொருள்.

19. Krishna and Nappinnai are addressed--They compete with each other to open the doors.

புதன் ஜனவரி,4, 2012

மார்கழி 19, கர வருடம்


திருப்பாவை-பாடல் - 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

 மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

 கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

 வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்

 மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை

 எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்;

 எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்

 தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்!
விளக்கம்: நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். வீரன் கொண்டுவரும் பொருளை வீரப்பத்தினி மிகவும் விரும்புவாள். அதுபோல், கம்சனால் ஏவப்பட்ட "குவலயாபீடம்' என்ற யானையோடு சண்டையிட்டு அதைக் கொன்று, அதன் தந்தங்களைப் பறித்து வந்தான். அந்த தந்தங்களினால் செய்யப்பட்ட கட்டிலில் நப்பின்னையும், கண்ணனும் உகந்து படுத்துள்ளனர். பாசுரத்தில் "கோடு' என்பது தந்தத்தைக் குறிக்கும்.

 மங்களகரமாக குத்துவிளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக்கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் - கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து 'மாசுச:' (கவலைப்படாதே) என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னைதான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. இந்தப் பாசுரம் "திருவிடவெந்தை' என்ற திவ்ய தேசத்தை உணர்த்துகிறது. பெருமாளையும் பிராட்டியையும் சேர்த்துச் சொல்கிறது இந்தப் பாசுரம்.
.


 Kudos to Thee! settl'd on a cot ivory foot'd 
        Soft silk cotton mattress with quality quintet
     In glimmering light of a metal lamp and
        Inclined on the bosom of Nappinnai
     Having flowerful locks bunch of blossoms bloom'd;
        Thy chest a flower bed, open Thy mouth this instant;
     Thy eye graced with
        Eye-liner black, a charm;
        Let whatsoev'r time, would't arouse thy groom;
        Nor howsoev'r endure a moment's separation this norm
        Is neither reality nor befitting, consider our damsel.

திருவெம்பாவை-பாடல் - 19

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய (திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)

 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
 அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
 எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
 எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க;
 எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
 கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க;
 இங்(கு)இப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
 எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்!

 
 விளக்கம்: எங்கள் தலைவனே, "உன் கையிலுள்ள பிள்ளை உனக்கே சரண்' என்னும் பழமொழியைப் புதுப்பிக்கின்றோமென்று நீ சொல்லக் கூடியதை அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பஞ் செய்கின்றோம். நீ கேட்டருள்வாயாக. எமது நகில்கள், நினது அன்பரல்லாதார் புயங்களைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கன்றி (வேறு தேவர்க்கு) எவ்வகையான தொண்டுஞ் செய்யாதொழிக. இரவும் பகலும் எங்கள் கண்கள் நின்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக. இந் நிலவுலகில் இம்முறையே எங்களுக்கு ஐயனே! நீ அருள் புரிவாயாயின், பகலவன், எத்திசையில் உதித்தால் எங்களுக்கு என்ன? (எது எப்படியானாலும் கவலை யாதுமில்லை).
 குறிப்பு: பெண்கள் பலரும் இறைவனை வேண்டிப் பாடல். தாயே தன் பிள்ளையைக் காத்துக் கொள்ளுவளாதலின், அவள் பிள்ளை அவளுக்கு அடைக்கலமென்று பிறர் சொல்லுதல் மிகையாகும். அதுபோல, இறைவனிடம் வேண்டுகோள் செய்தல் மிகையென்ற அச்சம் இருப்பினும், ஆசைபற்றி வேண்டுகோள் செய்வோம் என்பர்.

Meaning:
"The child in your hand is your own refugee", because of our fear of that adage coming to existence, our Lord, we tell you something, listen ! Let our breast not join the shoulder of somebody who is not Your lover; Let my hand not do any service other than for You; Night or day let my eye not see anything else. If You, my Lord, give us this gift, let the Sun rise wherever, what is our problem ? 



.