Wednesday 11 January 2012

26. The objects for the ritual are solicited.

புதன் ஜனவரி 11, 2012

மார்கழி 26, கர வருடம்

திருப்பாவை- பாடல் - 26

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையன
வேசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலரத்தினம் போன்றவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற்கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும் கொண்ட உன் சங்காகிய பாஞ்சஜன்யம்போன்ற வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

விளக்கம்: ரத்தினக்கல்லை விரும்புபவன் சாதாரண கல்லை ஒருபோதும் விரும்ப மாட்டான். அதுபோல, கண்ணனை நாடுபவர்களுக்கு வேறு எதுவும் தேவைப்படாது. பெரியவர்கள் வகுத்த நியதியை நாம் பின்பற்றவேண்டும் என்பதையும் இப்பாடலில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.

Oh! Amorous! Emerald-hued!
If thou wouldst lend an ear
To our requisites for Margali bath a la elders observed;
Thou shalt grant us huge conches, milky white
When trumpet'd shall bring
The entire earth to shudder severe, Much alike
Thy Panchajanya, grand vast drum, the choir,
Ornamental lamp, canopy, and flag to hoist;
Lavish out gift galore to gloat,
Thou reposed in banyan leaf afloat
Be benevolent, listen and consider, our damsel

திருப்பள்ளியெழுச்சி - பாடல் - 6

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: பார்வதிதேவியின் துணைவனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவபெருமானே! எம்பெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் அடியவர்கள், குடும்பம், பந்தபாசங்களை உதறிவிட்டு உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர். கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி நிலை தர உடனே விழித்தருள வேண்டும்.

விளக்கம்: பாசபந்தம் இருக்கும் வரை உயிர்களை பிறவிப்பிணி தொடரும். அற்றது பற்றெனில் உற்றது வீடு என்பர். அதனால், சிவசிந்தனையில்மனம் ஈடுபட்டவர்க்கு பாசபந்தம் அகன்றுவிடும் என்பதை மாணிக்கவாசகர் இப்பாடலில் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment