Monday 2 January 2012

17. Awakening Nandagopala, Yasoda, Krishna and Balarama.

திங்கள் ஜனவரி,2, 2012
மார்கழி 17, கர வருடம்


திருப்பாவை-பாடல் - 17


அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே,
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.


பொருள்: ஆடை, தண்ணீர், அன்னதானம்செய்யும் தலைவரான நந்தகோபரே! எழுவீராக. கொடியிடை பெண்களுக்கு எல்லாம் தலைவியும், இரக்கசுபாவம் கொண்டவளும், மங்கள தீபம் முகத்துடன் பிரகாசிப்பவளுமான யசோதையே! எழுவாயாக. விண்ணையும் தாண்டி திருவடிகளால் உலகளந்த தேவர் தலைவனான கண்ணனே! எழுவாயாக. சொக்கத்தங்க சிலம்பணிந்த செல்வத்திருமகனே! பலராமனே! நீயும், உன் தம்பியும் உடனே எழ வேண்டும்.விளக்கம்: திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் மூன்று பாடங்களில் சிறப்பிக்கிறாள் ஆண்டாள்.


"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி' என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி' என்றும் சொல்கிறாள். மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். கர்வம் அடங்கினால் அந்த நல்லவன் இறைவனை அடைவது உறுதி என்பதால், நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். "தான்' என்ற ஆணவமே இறைவனை அடைய தடைக்கல்லாக உள்ளது. அதை விட்டுவிடு என்று அறிவுறுத்துகிறாள் ஆண்டாள்.


Attire, water and food thou donate  
        Our patron Nandagopala arise!
     Sprout of a creeing plant! Light of our clan!
        Our patroness Yasoda, get enlighten'd!
     Grown piercing the cosmos, Thou had meted this earth.
        King of Angels! Thou shalt arise!
     Shed Thy sleep, drowse no more,
        Baladeva wealthy! Thy foot bright adorn'd
        By gold anklet of a victor;
        Junior and thyself our benefactor
        Discard drowsing! Arise and consider our damsel.
திருவெம்பாவை -பாடல் - 17


செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி! நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!


பொருள்: தோழியரே! நாராயணன், பிரம்மா, பிற தேவர்களிடம் கிடைக்காத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், வீடுகள் தோறும் எழுந்தருளு கிறான். தாமரை திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அவனை வணங்கி நலம் பெறும் பொருட்டு, இந்த தாமரை பொய்கையில் நீராடி மகிழ்வோம்.விளக்கம்: இறைவனை "சேவகன்' என்கிறார் மாணிக்கவாசகர். ஆம்..அவனை அணுகாத வரை தான் அவன் நமக்கு எஜமானன். அணுகி விட்டால், அவனுக்கு நாம் எஜமானன். அவன் சேவகன் போல் சேவை செய்ய நம்மருகே வந்து கைகட்டி நிற்பான்.

Meaning:
With the red eyed one, with the direction faced one, with the dhEvAs - the joy that is not present anywhere, giving that joy to us, bee eating plaited girl, the Red one who pampers us, residing and blessing in all our homes, blessing us giving the red lotus like Golden foot, Charming eyed king, the great Nectar for we slaves, our Lord, singing Him with the goodness booming bathe in the lotus floral water. 

No comments:

Post a Comment