Wednesday 4 January 2012

19. Krishna and Nappinnai are addressed--They compete with each other to open the doors.

புதன் ஜனவரி,4, 2012

மார்கழி 19, கர வருடம்


திருப்பாவை-பாடல் - 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

 மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

 கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

 வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்

 மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை

 எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்;

 எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்

 தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்!
விளக்கம்: நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். வீரன் கொண்டுவரும் பொருளை வீரப்பத்தினி மிகவும் விரும்புவாள். அதுபோல், கம்சனால் ஏவப்பட்ட "குவலயாபீடம்' என்ற யானையோடு சண்டையிட்டு அதைக் கொன்று, அதன் தந்தங்களைப் பறித்து வந்தான். அந்த தந்தங்களினால் செய்யப்பட்ட கட்டிலில் நப்பின்னையும், கண்ணனும் உகந்து படுத்துள்ளனர். பாசுரத்தில் "கோடு' என்பது தந்தத்தைக் குறிக்கும்.

 மங்களகரமாக குத்துவிளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக்கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் - கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து 'மாசுச:' (கவலைப்படாதே) என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னைதான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. இந்தப் பாசுரம் "திருவிடவெந்தை' என்ற திவ்ய தேசத்தை உணர்த்துகிறது. பெருமாளையும் பிராட்டியையும் சேர்த்துச் சொல்கிறது இந்தப் பாசுரம்.
.


 Kudos to Thee! settl'd on a cot ivory foot'd 
        Soft silk cotton mattress with quality quintet
     In glimmering light of a metal lamp and
        Inclined on the bosom of Nappinnai
     Having flowerful locks bunch of blossoms bloom'd;
        Thy chest a flower bed, open Thy mouth this instant;
     Thy eye graced with
        Eye-liner black, a charm;
        Let whatsoev'r time, would't arouse thy groom;
        Nor howsoev'r endure a moment's separation this norm
        Is neither reality nor befitting, consider our damsel.

திருவெம்பாவை-பாடல் - 19

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய (திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)

 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
 அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
 எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
 எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க;
 எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
 கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க;
 இங்(கு)இப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
 எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்!

 
 விளக்கம்: எங்கள் தலைவனே, "உன் கையிலுள்ள பிள்ளை உனக்கே சரண்' என்னும் பழமொழியைப் புதுப்பிக்கின்றோமென்று நீ சொல்லக் கூடியதை அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பஞ் செய்கின்றோம். நீ கேட்டருள்வாயாக. எமது நகில்கள், நினது அன்பரல்லாதார் புயங்களைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கன்றி (வேறு தேவர்க்கு) எவ்வகையான தொண்டுஞ் செய்யாதொழிக. இரவும் பகலும் எங்கள் கண்கள் நின்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக. இந் நிலவுலகில் இம்முறையே எங்களுக்கு ஐயனே! நீ அருள் புரிவாயாயின், பகலவன், எத்திசையில் உதித்தால் எங்களுக்கு என்ன? (எது எப்படியானாலும் கவலை யாதுமில்லை).
 குறிப்பு: பெண்கள் பலரும் இறைவனை வேண்டிப் பாடல். தாயே தன் பிள்ளையைக் காத்துக் கொள்ளுவளாதலின், அவள் பிள்ளை அவளுக்கு அடைக்கலமென்று பிறர் சொல்லுதல் மிகையாகும். அதுபோல, இறைவனிடம் வேண்டுகோள் செய்தல் மிகையென்ற அச்சம் இருப்பினும், ஆசைபற்றி வேண்டுகோள் செய்வோம் என்பர்.

Meaning:
"The child in your hand is your own refugee", because of our fear of that adage coming to existence, our Lord, we tell you something, listen ! Let our breast not join the shoulder of somebody who is not Your lover; Let my hand not do any service other than for You; Night or day let my eye not see anything else. If You, my Lord, give us this gift, let the Sun rise wherever, what is our problem ? 



.
 

No comments:

Post a Comment